tamilnadu

img

எட்டு, எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சுக்கோ!!

என்னம்மா, இன்னிக்கு என்ன பண்ணப் போற..
அங்கிள், குட் மார்னிங்.. ரெண்டு மாசமா திட்டம் போட்டபடி எல்லாம் போகுது.. நலலா இருக்கு.. தேர்வு வரைக்கும் அதயே தொடர வேண்டியதுதான்..
எனக்கு நினைவுல இருக்கு... இடம், நேரம், புத்தகங்கள்னு எதுவும் இல்லாம இருந்த நிலைமை.. நாம ரெண்டு பேரும் உக்காந்து பேசுனோம்..  திட்டமே இல்லாம போறதுதான் பிரச்சனைனு புரிஞ்சுது.. இந்த இடத்துல, இந்த நேரத்துல படிக்குறதுன்னு திட்டம் போட்டோம்.. புத்தகங்கள் இருக்குற இடமாவும் அது இருந்துச்சு..
ஆமா, அங்கிள்.. அப்போ எனக்கு ரஜினி படத்துப் பாட்டு ஒன்னு நினைவுக்கு வந்துச்சு... 
அதென்ன பாட்டு.. என்கிட்ட சொல்லலியே.
எட்டு எட்டா மனுஷ வாழ்வப் பிரிச்சுக்கோங்குற பாட்டுதான்.. ராகம் நல்லாருக்கும்... ஆனா பிரிக்குற முறைய என்னால ஏத்துக்க முடியல.. மூணாவது எட்டுல திருமணம்.. 17லருந்து 24க்குள்ள திருமணம்குறது காலத்துக்குப் பொருத்தமானதா இல்ல.. ஏற்கனவே மக்கள்தொகைல சீனாவ முந்திட்டோம்.. 
ஓ... நீ அப்புடிச் சொல்ல வர்றியா..
எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்லனு சொல்றதயும் நான் ஏத்துக்கல.. வாக்கிங் போறவங்களப் பாருங்க.. 70, 80 வயசுக்காரங்க நல்லா இருக்காங்க.. உடம்புக்குப் பிரச்சனைனா மருத்துவம் பாத்துக்குறாங்க.. இன்னிக்கு மருத்துவ முறைகள் வளர்ந்துருக்கு..
நீ காட்டுறவஙக பலரும் ஓய்வூதியம் வாங்குறவங்க.. அது அவங்களுக்கு நீண்ட ஆயுள் குடுத்துருக்குறது உண்மைதான்.. வாழ்க்கையத் திட்டமிட அது உதவுது.. திட்டமிட்ட வாழ்க்கை, திடமான வாழ்க்கை
நீங்க திட்டமிடல வலியுறுத்துறீங்க.. ஆனா, நம்ம நாட்டுல இருந்த திட்டக்குழுவயே கலைச்சாச்சே..
ஆமா... இப்ப இருக்குறது நிதி ஆயோக்.. திட்டமிடல்குறது நல்ல கோட்பாடு.
படிச்சிருக்கேன் அங்கிள்.. 1917ல நடந்த ரஷ்யப் புரட்சியப்பதான் இது முன்னுக்கு வந்துச்சு.. 1928ல முதல் ஐந்தாண்டுத் திட்டத்த சோவியத் யூனியன் கொண்டு வந்துருச்சு.. மேற்குலக நாடுகள்லாம் இந்தத் திட்டமிடுறத ஏத்துக்கல..
பின்ன... அரசுத்துறைகள முன்னிறுத்துறத அவங்க எப்புடி ஏத்துக்குவாங்க.
மக்களுக்கு எது தேவையோ அதுதான முக்கியம்.. இதப்பாத்துதான் நம்ம நாட்டுலயும் விடுதலைக்குப் பிறகு ஐந்தாண்டுத் திட்டங்களக் கொண்டு வந்தாங்க.. திட்டமிடுறதுலயும் பல வகை இருக்கு அங்கிள்..
ஆமா.. மையத்திட்டம், தூண்டும் திட்டம், சுட்டிக்காட்டும் திட்டம், அப்புறமா சுழல் திட்டம்னு இருக்கு... அதத்தான சொல்ல வர்ற..
அதேதான்.. இதுல மையத்திட்டம்தான் நம்ம ஐந்தாண்டுத் திட்டங்கள்லாம்.. மொரார்ஜி தேசாய் பிரதமரானப்பதான் இந்த சுழல் திட்டத்த செயல்படுத்திப் பாத்தாங்க.. ஒரு வருஷத்துக்கு திட்டம் போடுவாங்க... அதப்பாத்துட்டு அடுத்த வருஷம் என்ன பணணலாம்னு யோசிப்பாங்க. சுட்டிக்காட்டும் திட்டங்குறது, தொழில் முனைவோர்கிட்ட ஆலோசனை கேட்டுப் பண்றது... இது பிரான்சுல செஞ்சு பாத்தாங்க.. 
தூண்டும் திட்டம்குறது தனியாருக்கு சலுகை குடுத்து அவங்க ஊக்கப்படுத்துனா போதும்னு நினைக்குறது..
இப்ப நாம அதத்தான் செஞ்சுகிட்டுருக்குற மாதிரி இருக்கு, அங்கிள்... நாம ஐந்தாண்டுத் திட்டத்த செயல்படுத்துறப்ப திட்ட விடுமுறை வேற அறிவிச்சோம்.. 1966-69ல அது இருந்துச்சு... 
அப்போ விடுமுறை.. அதுவும் திட்டமிட்ட விடுப்பு... இப்போ நிரந்தர ஓய்வு.. 
அங்கிள்... இதுவும் திட்டமிட்டதுதான்.. தனியார ஊக்குவிக்குற திட்டம்.. எட்டு எட்டாப் பிரிக்குறதுலயும் இது கைய வெக்குது..
இதென்ன புதுசாச் சொல்ற..
ஆமா... எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேரம் உறக்கம்... இதுதானே மனித வாழ்த்கை.. வேலை நேரத்தத் திட்டம் போட்டு காலி பண்றாங்களே..
நீ சொல்றது சரிதான்... 19ஆம் நூற்றாண்டுல இந்தக் கோரிக்கை வந்துசசு.. எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர கேளிக்கை, எட்டு மணி நேர ஓய்வுனு முன் வெச்சாங்க.. 
அப்போ நம்மள பின்னுக்குப் போக வைக்குறாங்க.. நாங்க முன்னாடி போக வெக்கணும்.. சரி அங்கிள். வர்றேன்... பாப்போம்..