திண்டுக்கல், மே 15- எட்டு மணி நேர வேலை உத்தர வாதம் வழங்க வேண்டும். வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும் என வலியுறுத்தி அரசு போக்கு வரத்து தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் திண்டுக்கல் 1, 2, 3 பணி மனைகளிலும் நத்தம், வேடசந்தூர், பழனி, வத்தல குண்டு, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன.