tamilnadu

img

திணிக்கப்படாத வரை இந்தியை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்

சென்னை, ஜன. 16- இந்தி மொழி திணிக்கப்படாத வரை அம்மொழியை கற்க வேண் டியவர்கள் கற்றுக் கொள்வார்கள் என கவிப்பேரரசு வைரமுத்து கூறியுள்ளார். திருவள்ளுவர் தினத்தை யொட்டி சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள சென்னை மாநக ராட்சி பூங்காவில் உள்ள திரு வள்ளுவர் சிலைக்கு கவிப் பேரரசு வைரமுத்து மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ஆண்டுக்கு ஆண்டு திருவள்ளு வர் திருநாளுக்கு பெருகி வரும் ஆதரவு திருவள்ளுவரின் செல்வாக்கு பெருகுவதை காட்டு கிறது. திருவள்ளுவர் பண்பாட் ட்டின் வரலாற்று அடையாளம். கடந்த வாரம் அதிகம் பேசப்பட்ட இரு மொழிக் கொள்கை குறித்து பேச வேண்டும். திருக்குறளை படிக்கும்போது நாங்கள் தமிழையே படிக்கிறோம். மும்மொழி கொள்கை என்றால் திணிப்பு என்பதே தமிழர்களின் தீர்க்கமான எண்ணம். இந்தி மொழி திணிப்பை வேண்டாம் என்கிறோம். இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள். இங்கிருந்து வட மாநிலத்திற்கு செல்பவர்கள் இந்தியை கற்றுக் கொள்கி றார்கள். அங்கிருந்து தொழி லுக்காக வருபவர்கள் தமிழை கற்றுக் கொள்கிறார்கள். மூன்றா வது மொழி என்பது சூழலால் வரு வது. தாய்மொழி பண்பாட்டு மொழி. ஆங்கிலம் நாகரிக மொழி. ஒரு மனிதன் பண்பாட்டுடன் நாக ரிகத்துடன் திகழ தமிழ், ஆங்கி லம் போதும். இந்தி மொழி மீது அச்சம் உள்ளது. வட மொழி கலக்கும் போதெல்லாம் தமிழ் கலப்படம் ஆகிறது. எப்படி கரையான் புகுந்து ஒரு  மரத்தை அரிக்கிறதோ, அதுபோல் வடமொழி நிலத்தை அரித்து விட்டது. அப்படி நாங்கள் அதிகம் இழந்திருக்கிறோம். இனியும் எங்கள் மொழியையும், நிலத்தை யும், இனத்தையும் இழக்க தயா ராக இல்லை. இந்தி மொழி மீது எங்களுக்கு கோபம் இல்லை. அச்சம் உள்ளது. இந்த நியாய மான அச்சத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தி மொழியை திணித்து தமிழர்களுக்கு அச்சத்தை கொடு க்காமல் பாதுகாப்பை கொடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை  கேட்டுக் கொள்கிறோம். திருக் குறளை நாள்தோறும் தமிழர்கள் தங்கள் வீடுகளில் ஓத வேண்டும். இவ்வாறு கவிப்பேரரசு வைர முத்து கூறினார்.