நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு தஞ்சை எம்.பி., பாராட்டு
தஞ்சாவூர், ஜூன் 6- நடைபெற்று முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற, தஞ்சாவூர் நாடா ளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, “பள்ளியைத் தேடி நாடாளுமன்ற உறுப்பினர்” என்ற திட்டத்தின்கீழ், தஞ்சை திமுக நாடாளு மன்ற உறுப்பினர் ச.முரசொலி நேரில் சென்று பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரி யர்களுக்கு சால்வை, பதக்கம் அணிவித்து, பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டி வருகிறார். அந்த வகையில் பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கழுகுப்புளிக்காடு, ஆவ ணம், கரிசவயல் அரசு மேல்நிலைப் பள்ளி களில் புதன்கிழமை மாலை பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் முன்னிலை வகித்தார். தலைமை வகித்த, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி விழாக்களில் கலந்து கொண்டு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் என்.பாத்திமா விஜயராணி (கழுகுப்புளிக்காடு), மு.கருணாநிதி (ஆவணம்), வீ.திரு முடிச்செல்வன் (கரிசவயல்) மற்றும் இரு பால் ஆசிரியர்கள், அலுவலக பணியா ளர்களை பாராட்டி கௌரவித்தார்.