சென்னை, செப்.19- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில், சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் தொடர்புத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் சந்தித்தார்.அப்போது இரு நாட்டு வர்த்தகம், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பேசினர். இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, பொதுத் துறைச் செயலர் டி.ஜகந்நா தன், சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரக துணைத் தூதர் எட்கர் பாங்க், வளர்ந்து வரும் சந்தைப் பிரிவின் முது நிலை இயக்குநர் பிரான்சிஸ் சாங் ஆகி யோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘சிங்கப்பூரின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் தொடர்புத் துறை அமைச்சர் ஈஸ்வரனை சந்தித்தது ஒரு அற்புதமான தருணம். தமிழகத்துக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பண்பாடு மற்றும் பொருளாதார உறவு களை வலுப்படுத்துவது குறித்து ஆக்க ப்பூர்வமான விவாதத்தை நடத்தி னோம்’’ என்று தெரிவித்துள்ளார்.