tamilnadu

img

சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் நியமனம்

சென்னை, நவ.30- சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபிதாமரைக்கண்ணன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அந்த இடத் திற்கு சங்கர் நியமிக்கப் பட்டிருக்கிறார். தமிழக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் நவ.30 அன்று பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, தமிழக காவல் துறை யின் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜி பியாக இருந்து வரும் ஐபிஎஸ் அதி காரி சங்கரை சட்டம் - ஒழுங்கு ஏடிஜி பியாக நியமித்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. காவல் தலைமையக ஏடிஜி பியாக செயல்பட்டு வந்த வெங்கட் ராமன், கூடுதலாக நிர்வாகப் பிரிவை யும் சேர்த்து கவனிப்பார் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.  இதேபோல் ஊர்க்காவல் படை, கமாண்டோ படை ஏடிஜிபியான ஜெயராம், ஆயுதப்படை ஏடிஜி பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக காவல் துறை யின் பயிற்சி பள்ளி மற்றும் அகாடமிகளை டிஜிபி சைலேந்திர பாபு கூடுதல் பொறுப்பாக கவ னித்துக் கொள்வார் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதே போல், கோவை சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக செயல்பட்டு வந்த மதிவாணன், போக்குவரத்து பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு ள்ளார். கோவை போக்குவரத்துப் பிரிவில் இருந்த அசோக்குமார், சென்னை சைபர் குற்றப் பிரிவுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.  மேலும், கடலோர காவல் படை யின் துணை ஆணையர் செல்வக் குமார், தமிழ்நாடு கமாண்டோ படை யின் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் கள் உள்பட மொத்தம் 9 ஐபிஎஸ் அதி காரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித் துள்ளது.