tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ரத்த தான முகாம்

அறந்தாங்கி, ஜூன் 8 - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபட்டினம் கிளை 1 மற்றும் அறந்தாங்கி  அரசு மருத்துவமனை இணைந்து, ரத்த தானம் முகாமை ஞாயிற்றுக்கிழமை, அம்மாப்பட்டினம் வடக்குத்  தெரு, ஈக்தா மைதான கட்டடத்தில் நடத்தின. இந்த முகா மிற்கு,  மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான்  தலைமை  வகித்தார். மாவட்டச் செயலாளர் முஹம்மது மீரான், மாவட்ட  மருத்துவர் அணிச் செயலாளர் சபியுல்லா, கிளைத் தலைவர் ராசிக்,  செயலாளர் இக்பால், பொருளாளர் யூசுப்  மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். மருத்துவ தகுதி அடிப்படையில், 40 யூனிட் ரத்தம் கொடையாக பெறப்பட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இரத்தம்  வழங்கிய அனைவருக்கும், அறந்தாங்கி அரசு மருத்துவ மனை மருத்துவர் ஹேமலதா சான்றிதழ்களை வழங்கி னார். மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சபியுல்லா  நன்றி கூறினார்.

ஜூன் 11 குரும்பலூரில் மக்கள் தொடர்பு முகாம்  

பெரம்பலூர், ஜூன் 8-  பெரம்பலூர் வட்டம், குரும்பலூர் (தெற்கு) கிரா மத்தில், 11.06.2025 (புதன்கிழமை) அன்று மாவட்ட ஆட்சி யர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே பெரம்பலூர் வட்டம், குரும்பலூர் (தெற்கு) மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக குரும்பலூர் (தெற்கு) கிராம நிர்வாக அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர்களிடம் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் முனைவோர், புத்தாக்கம் சான்றிதழ் படிப்பில் சேரலாம்  

தஞ்சாவூர், ஜூன் 8 -  தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும், தமிழ்நாடு தொழில்  முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), அகமதாபாத் EDII உடன் இணைந்து கடந்த  ஆண்டு முதல் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற் கான சான்றிதழ் படிப்பினை [CPEI] நடத்தி வருகிறது.  தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த கல்வியை பயின்று வருகின்றனர். பாடத்திட்டம் மேம்பாடு மற்றும் நிபுணர்களின் பயிற்சி  மூலம் தொழில்முனைவோரை வளர்ப்பதில் EDII அகமதா பாத், தனது பரந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறது.  இந்த ஆண்டும் சான்றிதழ் படிப்பு ஜூன் 2025 முதல் தொடங்கவுள்ளது., இதற்கான விண்ணப்பங்கள் (ஆன் லைன் முறையில்) https://www.editn.in/Web-One-Year-Registration வரவேற்கப்படுகின்றன. தொழில் முனைவோராக ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்தப் படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.80,000/-. கட்ட ணத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. 21 வயது முதல்  40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் மற்றும் ITI-யில் தொழிற்கல்வி பயிற்சி முடித்தவர்கள் சேரத் தகுதியுடைய வர்கள்.  இது தொழில்முனைவோர் குறித்த கல்வித்திட்ட மாகும், எனவே, தொழில் முனைவோராக முயற்சிக்கும் ஆர்வலர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும்.  கல்விக் கட்டணம் செலுத்த தேவைப்படும் மாணாக்க ருக்கு கட்டணத்திற்கான வங்கிக் கடன் வசதிகளும் செய்து  தரப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு www.editn.in  ஐப் பார்வையிடவும் அல்லது மாவட்ட திட்ட மேலாளர் அமர்நாத்-ஐ 8668101638 / 8668107552 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.  இந்தத் கல்வித்திட்டத்தில் இணைந்து விரைவில் ‘தொழில் முனைவோராக ஆகலாம்’ என மாவட்ட ஆட்சி யர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை தஞ்சாவூரில் 3 இடங்களில் சிறப்பு முகாம்

டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஜூன் 10, 17, 24 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவிக்கையில், “மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டையில் கோட்ட அளவில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜூன் 10, கும்பகோணம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கே.எம்.எஸ்.எஸ். வளாகத்தில் ஜூன் 17, பட்டுக்கோட்டை வட்டாட்சியரகம் எதிரே உள்ள கிராம சேவை கட்டடத்தில் ஜூன் 24 ஆகிய தேதிகளில் இம்முகாம் நடைபெறவுள்ளது. இதில் எலும்பு முறிவு மருத்துவர், காது, மூக்கு, தொண்டைப் பிரிவு மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளைப் பரிசோதனை செய்து, மருத்துவச் சான்று வழங்கவுள்ளனர். இதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படங்கள், இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகளும் இம்முகாமில் ஆவணங்களுடன் வந்து விண்ணப்பிக்கலாம்” என்றார்.

பச்சைபயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு

மயிலாடுதுறை, ஜூன் 8 - பச்சைபயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. பச்சைபயறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த பச்சைபயறு விளைபொருளை ஒன்றிய அரசின் நேபட் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு கொள்முதல் செய்து வருகிறது. தற்போது பச்சைபயறு விலை 1 கிலோ ரூ.60/- முதல் ரூ.65/- வரை உள்ளுர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு 1 கிலோ பச்சைபயறு விலை ரூ.86.82/- என கொள்முதல் செய்ய கூடுதல் இலக்கு ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இத்திட்டம் நாகப்பட்டினம் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கும் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் மற்றும் சீர்காழி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் 390 மெ.டன் பச்சைபயறு கொள்முதல் செய்ய அரசு ஆணையிட்டு, கொள்முதல் முடிடைந்த நிலையில், விவசாயிகளின் நலன் கருதி பச்சைபயறு கொள்முதல் செய்ய கூடுதல் இலக்கான 1092 மெ.டன் நிர்ணயம் செய்து வரப் பெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கூடுதல் இலக்காக செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு பச்சைபயறு 425 மெ.டன்னும். குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு பச்சைபயறு 222 மெ.டன்னும், மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு பச்சைபயறு 238 மெ.டன்னும், சீர்காழி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு பச்சைபயறு 207 மெ.டன்னும் இலக்காக அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஒரு ஹெக்டர் சாகுபடி பரப்பிற்கு 384 கிலோ பச்சைபயறு (155 கிலோ பச்சைபயறு ஒரு ஏக்கர் என்ற அளவில்) என்ற அளவில் கொள்முதல் செய்யப்படும். 29.06.2025 உடன் இத்திட்டம் முடிவடையவுள்ளதாலும், நேபட் நிறுவனத்தின் அதிகபட்ச தர காரணிகளான அயல்பொருட்கள்-2%, கலப்பினம் - 3%, அதிகம் சேதமடைந்த பயறுகள் - 3%, குறைந்த சேதமடைந்த பயறுகள் - 4%, முதிர்ச்சி அடையாத பயறுகள் - 3%, வண்டுகள், பூச்சிகள் தாக்கிய பயறுகள் 4% மற்றும் ஈரப்பதம் - 12%-க்குள் இருக்க வேண்டும், விவசாயிகள் தங்களுடைய பச்சைபயிரினை மேற்படி தர காரணிகளுக்குள் கொண்டு வரும் நிலையில் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். எனவே பச்சைபயறு சாகுபடி செய்யும் விவசாயிகள், விலை ஆதரவு திட்டத்தில் (PSS) பதிவு செய்து பயன் பெறலாம்” என தெரிவித்துள்ளார்.