tamilnadu

பூவை ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

பூவை ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

உயர் நீதிமன்றம் தீர்ப்பு சென்னை, ஜூன் 27 - ஆள் கடத்தல் வழக்கில் தொடர்பு  இருப்பதற்கான முகாந்திரம் இருப்பதால் எம்.எல்.ஏ. பூவை ஜெ கன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், களம் பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளை ஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை  காதலித்து பதிவுத் திருமணம் செய்தார். பெண் வீட்டாருக்கு ஆதர வாக கூலிப் படையினர் மூலம்  இளைஞரின் சகோதரர் கடத்தப் பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார். சிறு வனை கடத்தியதாக கே.வி.குப்பம்  தொகுதி எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் மீது போலீ சார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் பெண் ணின் தந்தை உள்பட 5 பேர் ஏற்கனவே கைதாகியுள்ளனர். பூவை ஜெகன்மூர்த்தி, முன் ஜாமீன்  கோரி சென்னை உயர் நீதிமன்றத் தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், “கடத்தல் வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.  எனவே, எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்“ எனக் கேட்டி ருந்தார். உச்ச நீதிமன்ற உத்தர வையடுத்து, ஆள்கடத்தல் வழக்கு  நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அமர் வுக்கு மாற்றப்பட்டது.  இதையடுத்து வெள்ளியன்று இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெகன்மூர்த்தி தரப்பு வழக்கறிஞர், தங்கள் தரப்புக்கு இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லை என்றும், அரசியல் கார ணங்களுக்காகவே சிக்க வைக்கப் பட்டுள்ளார் என்றும் வாதிட்டார். கடத் தப்பட்ட சிறுவன், ஜெகன்மூர்த்தியை  சந்தித்ததாக வாக்குமூலத்தில் கூற வில்லை என்பதையும் எடுத்துரைத் தார். மறுபுறம், சிபிசிஐடி தரப்பு வழக்கறிஞர், ஜெகன்மூர்த்தி தான்  இந்த ஆள்கடத்தலுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார் என்றும்,  ஏடிஜிபி ஜெயராமுடன் இவர் நேரில்  சந்தித்து பேசியுள்ளார் என்றும் குற்றம் சாட்டினார். கடத்தப்பட்ட சிறுவனை ஏடிஜிபியின் காவல்துறை  வாகனத்தில் அழைத்துச் சென்ற தற்கான ஆதாரங்கள் உள்ளதாக வும் கூறினார். மேலும், சிபிசிஐடி தரப்பு ஜெகன்மூர்த்தியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளது. நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜெகன்மூர்த்தியின் வாக்குமூலம்,  கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஜாமீன் வழங்கினால் விசார ணையில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து அரசு விளக்க மளிக்க வேண்டும் என்று உத்தர விட்டு வழக்கை ஒத்திவைத்துள்ள னர். இதனையடுத்து, அரசு தரப்பில்  நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், முன் ஜாமீன் கோரி ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி  செய்து தீர்ப்பளித்தார்.