இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா, நிர்வாகி கிஷோர் உள்ளிட்ட திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.