tamilnadu

img

பாஜகவை எதிர்ப்பவர்களை ஒடுக்கவே பொது சிவில் சட்டம்: மு.க.ஸ்டாலின்

சென்னை,ஜூலை 6- பாஜகவை எதிர்ப்பவர் களை பழிவாங்க வேண்டும்  என்பதற்காகவே பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவர உள்ளதாக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா  ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்தி இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளின் இயக்குநராக உள்ளார். அவரது மகன் சாரங்கராஜன் என்ற சஞ்சய்க்கும், கீர்த் தனாவுக்கும் வியாழனன்று (ஜூலை 6) சென்னை அறிவா லயத்தில் திருமணம் நடை பெற்றது. இதில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக் களை வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், “வள்ளலாரை பற்றி ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். புலம்பிக்கொண்டு, உளறிக் கொண்டு இருக்கிறார். ஆனால் அவர் யார் என்று  நான் சொல்ல விரும்ப வில்லை. அது தமிழ் நாட்டுக்கே தெரியும்” என்றார். அதே போல் ஒன்றியத் தில் பாஜக ஆட்சி பொறுப் பேற்றதில் இருந்து மக்கள் விரோத போக்குகளையும், மதத்தையும் மக்களிடத் தில் திணித்து சர்வாதி கார ஆட்சியை நடத்திக்  கொண்டிருக்கிறது. பொது  சிவில் சட்டம் மூலம் பாஜ கவின் கொள்கைகளையும், பாஜகவை எதிர்ப்பவர் களையும் பழிவாங்கும் நோக்கத்துடன் தீய செயல் களை செய்கிறார்கள்” என்றார். நாட்டில் ஏற்கெனவே சிவில் சட்டம், கிரிமினல் சட்டங்கள் இருக்கிறது. அதை நீக்கிவிட்டு, பொது  சிவில் சட்டமாக கொண்டு  வந்து பாஜக கொள்கை களை அதில் திணிக்க உள்ள னர். அவர்களின் ஆட்சியை எதிர்க்க கூடியவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும், மக்களுக்கு துன்பங்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கிலும் தான்  அவர்கள் இதை செய்கின் றனர். ஏற்கெனவே அவர் களை எதிர்க்கக் கூடியவர் களை, சிபிஐ, ஐடி,  இடி போன்ற துறைகளை வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். இந்த திருமண விழாவில்   அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள் ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.