தேனி, மே 17- தேனி மாவட்டத்தில் உள்ள 5 வட்டங்க ளில் வருவாய் தீர்வாயம் துவங்கிய முதல் நாளில் 649 மனுக்கள் பெறப்பட்டன..போடி யில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா கலந்து கொண்டு மனுக்களை பெற்றார் . தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டி பட்டி, போடிநாயக்கனூர், தேனி, உத்தம பாளையம் மற்றும் பெரியகுளம் ஆகிய 5 வட்டங்களிலுள்ள வருவாய் கிராமங்களுக் கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வட் டாட்சியர் அலுவலகங்களில் புதன்கிழமை துவங்கி வருகிற மே 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புதன்கிழமை நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் ஆண்டிபட்டி வட்டத்தில் 171 மனுக்களும், போடிநாயக்கனூர் வட்டத்தில் 108 மனுக்களும் பெரியகுளம் வட்டத்தில் 92 மனுக்களும், தேனி வட்டத்தில் 214 மனுக் களும், உத்தமபாளையம் வட்டத்தில் 64 மனுக்களும் என மொத்தம் 649 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பெறப்படும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு பயன்களை உடன் வழங்கிட மாவட்ட ஆட்சித்தலைவர் சம் பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விட்டார். தேனி ஆட்சியர் பங்கேற்பு போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலு வலகத்தில், இராசிங்காபுரம், சிலமலை, போ. அம்மாபட்டி ஆகிய வருவாய் கிராமங்க ளுக்கான வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆட் சியர் ஆர்.வி.ஷஜீவனா,தலைமையில் நடை பெற்றது .18 பயனாளிகளுக்கு நலத்திட்ட உத விகளை ஆட்சியர் வழங்கினார்.