tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்புடைய  பஞ்சு மற்றும் இயந்திரங்கள்

தீக்கிரை கோவை, ஏப்.11– சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கழிவுப் பஞ்சு குடோனில் வியாழனன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.1 கோடி மதிப்புடைய பஞ்சு மற்றும் இயந்திரங்கள் தீக்கிரையானது.  கோவை மாவட்டம் சூலூர் அருகே கலங்கல் சாலையில் விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான குடோன் உள்ளது. இதில் சுமார் 75 டன் கழிவுப் பஞ்சு சேமித்து வைக்கப்பட்டி ருந்தது. பஞ்சுகளைப் பயன்படுத்தி மெத்தை மற்றும் தலை யணை உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு நாட் களுக்கு முன்பு இக் குடோனில் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டு, அது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் வியாழ னன்று அதிகாலை 3 மணியளவில் மீண்டும் தீப்பற்றியது. பர பரப்பான காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவி, முழு குடோ னையும் குறுகிய நேரத்தில் தீக்கிரையாக்கியது. தீ விபத்தில், ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள பஞ்சு, 20 லட் சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு பிரிப்பு இயந்திரங்கள் மற்றும் குடோன் கட்டடம் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துள்ளன. ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி, மொத்த சேதம் ரூ.70 லட்சத் தைக் கடந்துள்ளதாக கூறப்படுகிறது. தீயைக் கண்டதும் ஊழி யர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கட்டுப்படுத்த முயன்றாலும், தீயின் வேகம் காரணமாக முயற்சிகள் வீணானது. தகவல றிந்து, சூலூர், கருமத்தம்பட்டி, பீளமேடு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. சம்பவத்துக்கு முன்னர் ஏற்பட்டிருந்த தீ விபத்து தொடர்பாக காப்பீடு நிறுவனத்தினர் வரவிருக்கையில், மீண் டும் ஏற்பட்ட இந்த விபத்து சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள தாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இதுகுறித்து சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாயை வேட்டையாடிச் சென்ற சிறுத்தை

உதகை, ஏப்.11– உதகை பகுதியில் குடியிருப்புகளில் புகுந்த சிறுத்தை ஒன்று, வீட்டு படிக்கட்டில் தூங்கிக் கொண்டிருந்த நாயை  வேட்டையாடி சென்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டா ரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுத்தைகளின் நட மாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியைத் தாண்டி குடி யிருப்புகளில் உலவும் இச்சிறுத்தைகள், வீட்டில் வளர்க்கப் படும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வேட்டை யாடும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப டுத்தி வருகின்றன. அண்மையில், , உதகை அருகே உள்ள தலையாட்டுமந்து பகுதியில், ஒரு வீட்டின் படிக்கட்டில் தூங்கிக் கொண்டிருந்த நாயை, வனப்பகுதியிலிருந்து வந்த சிறுத்தை ஒன்றும் பதுங்கிப் பார்வையிட்டு, பின்னர் மெது வாக நெருங்கி, அதன் கழுத்தைப் பிடித்து தூக்கிச் சென் றது. இந்த காட்சிகள் வீட்டின் முன்புறம் பொருத்தப்பட்ட சிசி டிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இக்காட்சிகள் தற் போது இணையத்தில் பரவி வருகிறது. “வனத்துறையினர் சம் பவம் நடந்த இடத்தில் உடனடியாக கண்காணிப்பு நடவ டிக்கைகள் மேற்கொண்டு, சிறுத்தை நடமாட்டத்தைக் கட்டுப் படுத்த வேண்டும்” என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.  இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூன் 12 இல் மேட்டூர் அணை திறப்பு?

சேலம், ஏப்.11- டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை வரு கின்ற ஜூன் 12 ஆம் தேதியன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் தமி ழக நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர்  மங்கத் ராம் சர்மா வியாழனன்று காலை ஆய்வு மேற் கொண்டார். அணையின் வலது கரை, இடது கரை, 16  கண் மதகு, ஆய்வு சுரங்கம் பகுதிகளையும், அணையில்  நடைபெற்று வரும் பராமரிப்பு, புனரமைப்பு பணிகளை யும் பார்வையிட்டார். மேல்நிலை மதகு, கீழ்மட்ட மதகு,  சுரங்கம் மற்றும் அணை மின் நிலையத்தையும் ஆய்வு  செய்தார். தொடர்ந்து, நீர்வளத்துறை திருச்சி மண்டல  தலைமை பொறியாளர் தயாளகுமார் மற்றும் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின் அவர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், மேட்டூர் அணையின்  பராமரிப்பு சிறப்பாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் முன் பாக நேரடியாக பார்வையிட்டு அணையின் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூன் 12 ஆம்  தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில்  வந்து மேட்டூர் அணை திறப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதனால் முன்கூட்டியே ஆய்வுப் பணி களை முடிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் தற்போது ரூ.20 கோடி செல வில் பணிகள் நடைபெற்று வருகிறது. 6 மாதங்கள் மட் டுமே பணிகள் செய்ய முடியும். தற்போது, இரண்டு மாதங்களுக்கு முன்பாக மேட்டூர் அணை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறப்பிற்கு முன்பாக இந்தப் பணிகளை முடிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை திறக்கப் பட்ட பிறகு பணிகள் நிறுத்தப்படும் மீண்டும் பாசன காலம்  முடித்த பிறகு பணிகள் துவக்கப்படும், என்றார். இந்த ஆய்வின் போது திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாள குமார், மேட்டூர் செயற் பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியா ளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.