இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கான விடுதியில் ஒரு சமையல் கூடம் என்ற அடிப்படையில் மாவட்டங்களில் உள்ள அனைத்து விடுதிகளுக்கும் ஒரே இடத்தில் உணவு சமைத்து கொண்டு செல்லும் முறையை மைய சமையலறை முறை (அளவு சாப்பாடு முறை) என தமிழ்நாடு அரசால் கூறப்படுகிறது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால் மாணவர்களின் அன்றாட உணவு முறையிலும் அவர்களின் கால நெறிமுறைகளிலும் பல்வேறு சிக்கல் ஏற்படும். அத்துடன் மாணவருக்கு அளவு சாப்பாடு என்ற கட்டுப்பாடும் ஏற்படக்கூடும். எனவே மாணவர்களுக்கு விரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள விடுதிகளுக்கான மைய சமையலறை திட்ட முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாண வர் சங்கம் தலைமையில் பிப்.26 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த, இந்திய மாணவர் சங்க மாநிலக் குழு திட்ட மிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாநகரில் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் இந்திய மாணவர் சங்க திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில், வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சூர்யா தலைமை தாங்கி னார். மாவட்டச் செயலாளர் ஜி.கே. மோகன் உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.