மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருக்கும் நிலை யில், டெல்டா பாசனத்துக்காக ஆண்டு தோறும் ஜுன் 12 அன்று தண்ணீர் திறக்கப் படுவது வழக்கம். இந்த ஆண்டு அணை யின் நீர் மட்டம் 103.35 அடியாகவும், நீர் இருப்பு 69.25 டிஎம்சியாகவும் அதாவது, போதிய நீர் இருப்பு இருந்ததால், ஜுன் 12 அன்று தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த காலத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடையும் என்ற எதிர்பார்ப்பிலும், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீர் திறக்க வாய்ப்பு இருக்கும் என்ற நம்பிக்கையிலும் டெல்டா சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த மழை இல்லாததால் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் அணையின் நீர் அளவு சரியத் தொடங்கியது. மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12 முதல் செப்டம்பர் 15 வரை 5.26 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற 125 டிஎம்சி தண்ணீர் தேவை என்ற நிலையில் அணையில் இருந்து 99.74 டிஎம்சி தண்ணீர் வழங்கவும் மீதமுள்ள 25.20 டிஎம்சி தண்ணீரை மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாக பூர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
20 நாட்களில் அணையில் இருந்து 15 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. இன்னும் 70 நாட்களுக்கு 110 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் தேவை. ஆனால் அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் நீர்மட்டம் 88.58 அடியாக சரிந்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 117 கன அடியாக உள்ளது. இத னால் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. கர்நாடக அரசு, ஜுன் மாதம் வழங்க வேண்டிய 9.10 டிஎம்சி தண்ணீரை உடனடி யாக தமிழகத்துக்கு திறக்க வேண்டும் என காவிரி நதிநீர் ஆணையம் உத்தர விட்ட நிலையிலும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை. இந்நிலையில், கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், கர்நாடகா வில் உள்ள அணைகளில் நீர்மட்டம் கணிச மாக சரிந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் தமிழ கத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளது டெல்டா மாவட்ட விவசாயிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக நிலவரம் என்னவென்றால் கேரளா, கர்நாடகா காவிரி நீர்ப் பிடிப்பு பகுதி களில் பெய்யும் பருவமழையால் கர்நாடகா வில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி அணை களுக்கு நீர்வரத்து ஏற்பட்டு அங்கிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரும். பருவமழை பொய்த்ததால், கே. ஆர்.எஸ். அணையில் 49.45 டிஎம்சி தண்ணீ ருக்கு பதிலாக 10 டிஎம்சி அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. கபினி அணையில் 19.52 டிஎம்சிக்கு பதிலாக 4.53 டிஎம்சி அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. மேட்டூர் அணையின் காவிரி கரையோர பகுதிகளில் செயல்படுத்தப்படும் 155 குடி நீர் திட்டங்களின் மூலம் தினசரி 170 கோடி லிட்டர் தண்ணீர், 18 மாவட்டங்களில் உள்ள பொது மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டெல்டா பாசனம், குடிநீர் பயன்பாட்டி ற்கும் தண்ணீர் திறந்துவிடப்படும் போது நீர்மின் நிலையம் மற்றும் கதவணை மின் நிலையங்கள் மூலமாக 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். எனவே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு என்பது விவசாயத்தை மட்டுமல்ல, குடிநீர் மின் உற்பத்தி ஆகியவற்றையும் பாதிக்கும். இந்நிலையில் வேக வேகமாக குறுவை சாகுபடியை துவங்கிய டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்க மும் கவலையும் ஏற்பட்டுள்ளது. விவசாயி களின் கலக்கத்தையும் கவலையையும் துடைப்பதற்கு என்ன செய்யப்போகிறது அரசு?
- ஆரூரான்