tamilnadu

img

மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர்!

மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர்!

குன்றக்குடி அடிகளாருக்கு முதல்வர் புகழாரம்

சென்னை, ஜூலை 11 - “தமிழில் அர்ச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர். பகட்டுச் சம்பிரதாயங்களைத் தவிர்த்தவர்; மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர்” என்று தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். குன்றக்குடி அடிகளாரின் நூற் றாண்டு நிறைவையொட்டி, முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது சமூகவலைதள பக்கத்தில் வெளி யிட்டுள்ள கருத்துப் பதிவில் கூறி யிருப்பதாவது: “தமிழில் அர்ச்சனை எனும் புரட்சி யை முன்னெடுத்தவர். சமூகநீதித் தளத்தில், பெரியார் - அண்ணா - கலை ஞர் என திமுக இயக்கத்துக்குத் துணை யாக நின்ற மாண்பாளர். சோவியத் யூனியன் பயணத்தின் உந்துதலால், பிரதமர் இந்திரா காந்தியே பாராட் டிய ‘குன்றக்குடிக் கிராமத் திட்டம்’ கொண்டு வந்த பொதுவுடைமைச் சிந் தனையாளர். பகட்டுச் சம்பிரதாயங் களை தவிர்த்து மனிதநேயம் போற் றிய சமத்துவச் சிந்தனையாளர். இந்தி எதிர்ப்புப் போரில் பங்கெடுத்த தமிழுணர்வாளர். கலைஞரின் விருப்பத்தின் வழியே தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப் பினராகி, மேலவையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்குப் பேசிய பெருந்தகையாளர். தமிழ்ச் சமூகத்தின் சமூகவியல் உள்ளடக்கிய இறையியல் அடையாளமாக விளங்கும் திருக்கைலாய பரம்ப ரைத் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி 45-ஆவது மகாசந்நிதா னம் திருப்பெருந் திரு தெய்வசிகா மணி அருணாசல தேசிக பரமாச் சாரிய சுவாமிகள் எனும் குன்றக்குடி அடிகளார் புகழ் வாழ்க. அவரது வழியில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தொண்டு தொடரட்டும்.”  இவ்வாறு முதல்வர் பதிவிட்டுள்ளார்.