tamilnadu

img

வாய்ப்பு வாசல்

டிஎன்பிஎஸ்சி மூலம் 615 பணியிடங்கள்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் 615 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணித்தேர்வு TNPSC (Combined Technical Service Exam) மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும். உதவி இயக்குநர், துணை மேலாளர், துணை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த பணியிட நிரப்புதலுக்கு குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிக பட்ச வயது பொதுப் பிரிவினருக்கு 32 ஆகவும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி உச்சபட்ச வயது வரம்பில் தளர்ச்சி இருக்கும். தேர்வு முறை இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும். தமிழ்மொழித் திறன் தேர்வு மற்றும் எந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கிறோமோ அதற்குரிய பாடங்களில் இருந்து வினாக்கள் இருக்கும். இந்த எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். தேர்வுத் தேதிகள் தமிழ்மொழித் திறன் தேர்வு -04.08.2025 முதல் 10.08.2025 வரை. எழுத்துத் தேர்வுக்கான விரிவான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விபரம், பணியிடங்களின் பெயர்கள், காலியிடங்களின் எண்ணிக்கை, கல்வித்தகுதி உள்ளிட்டவை குறித்த முழுமையான விபரங்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தரப்பட்டுள்ளன. விண்ணப்பிப்பதற்கான இணைப்பும் அதில் கிடைக்கும். கடைசித் தேதி இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 25.06.2025 ஆகும்.

சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் தேர்வு

அறிவியல் பாடங்களுக்கான நெட் தேர்வை சிஎஸ்ஐ ஆர் மற்றும்  யுஜிசி ஆகியவை இணைந்து நடத்துகின்றன. கடந்த மாதத்திலேயே வர வேண்டிய அறிவிக்கை தாமதமாக வந்துள்ளது. வேதியியல், புவிசார்ந்த அறிவியல், உயிரியல், கணித அறிவியல் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களில் இளநிலை ஆய்வுப்படிப்பு மற்றும் உதவிப் பேராசிரியர் நியமனம் மற்றும் முனைவர் பட்டத் திற்கான ஆய்வுப் படிப்பு ஆகியவற்றிற்கு தகுதி பெற இந்த நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசிய மாகும். கணினி வாயிலாக நடைபெறும் இந்தத் தேர்வு 180 நிமிடங்களுக்கு இருக்கும். கொள்குறிவகை வினாக்கள் இடம் பெறும். ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வினாத்தாள் இருக்கும்.  விண்ணப்பம் நிரப்புவதற்கான கடைசித்தேதி - 23.06.2025 தேர்வுத் தேதி - 26, 27 & 28 ஜூலை 2025. விண்ணப்பத்தை நிரப்புவதற்கான இணைப்பைப் பெறவும், கூடுதல் விபரங்களுக்கும் https://csirnet.nta.ac.inஎன்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

விமானப்படையில் குரூப் ‘சி’ 153 காலிப்பணியிடங்கள்

இந்திய விமான படையில் பணிபுரிந்து அனுபவம் பெற 153 காலிப் பணியிடங்களுக்கு தகுதியான வர்கள் நிரப்பப்பட உள்ளனர். கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியின் பெயர்: Transport driver,  Mess staff,   Cook,  Division clerk, Housekeeping staff மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பணிகளுக்கும் குறைந்தபட்சம் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிகளின் படி தளர்ச்சி தரப்படும்.  விண்ணப்பதாரரின் உடல்தகுதி, தொழிற்திறன் மற்றும் எழுத்துத் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி – 15.06.2025 எழுத்துத் தேர்வுக்கான விரிவான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விபரம், பணியிடங்களின் பெயர்கள், காலி யிடங்களின் எண்ணிக்கை, கல்வித்தகுதி உள்ளிட்டவை குறித்த முழுமையான விபரங்கள் www.indianairforce.in என்ற இணைய தளத்தில் தரப்பட்டுள்ளன. விண்ணப்பிப்ப தற்கான இணைப்பும் அதில் கிடைக்கும்.