tamilnadu

img

ஆந்திராவின் மசிலிப்பட்டிணத்தில் 125 வாக்குகளை அழிந்ததால் பரபரப்பு

ஆந்திர மாநிலத்தில் உள்ள மசிலிப்பட்டிணத்தில் வாக்குப்பதிவு எந்திரம் முறையாக இயங்குகிறதா என தேர்தல் அதிகாரி பரிசோதிக்க முயன்றபோது, 125 வாக்குகள் அழிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவைகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து, பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டு, அதை அதிகாரிகள் சென்று சரி செய்து வந்தனர்.

இந்நிலையில், மசிலிப்பட்டிணம் நகரில் 135/75 எண் கொண்ட வாக்குப் பதிவு மையத்தில் உள்ள வாக்கு எந்திரம் முறையாக இயங்குகிறதா என பரிசோதிக்க தேர்தல் அதிகாரி முயன்றார். அப்போது பதிவான 125 வாக்குகளும் திடீரென அழிந்து பூஜ்ஜிய நிலைக்கு வந்தது. இந்த விஷயம் அறிந்து, வாக்குப்பதிவு செய்ய வரிசையில் இருந்த வாக்காளர்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து, உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டது. ஏற்கனவே வாக்களித்த 125 பேரை மீண்டும் அழைத்து வாக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


;