tamilnadu

img

பீகாரில் நிதிஷை தோற்கடிக்க பஸ்வான் மூலம் பாஜக திட்டம்? முதல்வர் பதவியை இம்முறை ஐக்கிய ஜனதாதளத்திற்கு விட்டுத் தர தயாரில்லை

பாட்னா:
பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணியில்லை என லோக் ஜனசக்தி அறிவித்துள்ளது.

ஆனால், பாஜக-வுடன் தங்களின் கூட்டணி தொடர்வதாகவும், பாஜக-வை எதிர்த்துப் போட்டியிடப் போவதில்லை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.இதனிடையே, ராம்விலாஸ் பஸ்வான்தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியின் இந்த முடிவுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 28 தொடங்கி நவம்பர் 7 வரை மூன்றுகட்டங்களாக நடக்கிறது. இதில், ராஷ்டிரியஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ்,இடதுசாரிக் கட்சிகளை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்து விட்ட நிலையில், ஆளும் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியில் இழுபறிநீடித்து வந்தது. பஸ்வான் கட்சி தங்களுக்குமட்டும் 60 தொகுதிகள் வேண்டும் என்று அடம்பிடித்ததே இதற்குக் காரணம் என்று வெளியில் கூறப்பட்டது. வேறு சில கருத்துமுரண்பாடுகள் இருப்பதாகவும் லோக் ஜனசக்தி கூறியது. அந்த முரண்பாடுகள் என்னவென்று ஐக்கிய ஜனதாதளம் பலமுறை கேட்டும், ஒன்றைக்கூட வெளிப்படையாக லோக் ஜனசக்தி கூறவில்லை.

இறுதியாக, ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியில் தாங்கள் இல்லை என்று மட்டும்அறிவித்து லோக் ஜனசக்தி வெளியேறியுள்ளது. இந்நிலையில்தான், லோக் ஜனசக்தி கட்சியின் முடிவுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.2020 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை,ஐக்கிய ஜனதாதளம் தலைவரும், தற்போதைய முதல்வருமான நிதிஷ் குமாரை முன்னிறுத்தித்தான் சந்திக்கிறோம்; தங்கள் கூட்டணி வெற்றிபெற்றால் நிதிஷ்குமார்தான் மீண்டும் முதல்வர் என்று பாஜகஆரம்பத்திலேயே அறிவித்து விட்டது. நிதிஷ்குமாரும் அதனை நம்பியே பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.ஆனால், முதல்வர் பதவியை மீண்டும் நிதிஷ்குமாருக்கு விட்டுத்தர பாஜக-வுக்கு உள்ளூர விருப்பம் இல்லை என அரசியல்வல்லுநர்கள் கூறுகின்றனர். இதற்காக மறைமுகத் திட்டம் ஒன்றைத் தீட்டி, பாஜக-தான்,ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்திகட்சியை தனித்துப் போட்டியிட வைத்துள் ளது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியிலிருந்து தாங்கள் விலகினாலும், “ஐக்கியஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்து போட்டியிடுவோம்” என்று லோக் ஜனசக்தி அறிவித்திருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.பீகார் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம்கட்சிக்கு 122 தொகுதிகள், பாஜகவுக்கு 121தொகுதிகள் என்று இடங்கள் பங்கிடப்பட உள்ளன. இதில், ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடும் 122 தொகுதிகளில்தான், லோக் ஜனசக்தி எதிர்த்துப் போட்டியிடும் எனும் பட்சத்தில், ஐக்கிய ஜனதாதளத்தின் வெற்றிவாய்ப்பும், அதற்குக் கிடைக்கக் கூடிய தொகுதிகளும் கணிசமாக குறையும்.

இதன்மூலம் கூட்டணியில் தனிப் பெரும் கட்சியாக பாஜக உருவெடுக்கும்; அவ்வாறு வந்துவிட்டால் முதல்வர் பதவியையும் நிதிஷ்குமாரிடமிருந்து தட்டிப் பறித்து விடலாம் என்பதே பாஜக-வின் கணக்கு.கடந்த 2015 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஐக்கிய ஜனதாதளமும் ராஷ்ட்ரிய ஜனதாதளமும் அணி சேர்ந்தன. தேர்தல் முடிவில் கூட்டணியில் லாலுவின் ராஷ்ட்ரியஜனதாதளம் அதிக (80) இடங்களில் வென்றது. எனினும் குறைவான (71) இடங்களைப்பெற்ற நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவியைலாலு விட்டுக் கொடுத்தார். ஆனால் அவருக்கே பின்னாளில் நிதிஷ் குமார் துரோகம் இழைத்தார். 

அப்படிப்பட்ட துரோகப் பேர்வழியான நிதிஷ் குமாருக்கு தாங்கள் துரோகம் இழைப்பதில் தவறு இல்லை என்று பாஜகநினைக்கிறது. எவ்வளவு காலத்திற்குத் தான் நிதிஷ் பின்னாலேயே செல்வது..? 2020 தேர்தலில் அதற்கு முடிவுகட்டி விட வேண்டும் என்று பாஜக உறுதியாக இருக்கிறது.“மத்தியில் உள்ளதைப் போலவே பீகாரிலும் பாஜக தலைமையிலான அரசாங்கம்வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். பாஜகவுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் அவர்களை எதிர்த்து போட்டியிடுவோம்” என்று லோக் ஜனசக்தியின் தேசிய பொதுச்செயலாளர் உமர் காலிக் அளித்துள்ள பேட்டியும் இங்குகுறிப்பிடத்தக்கது.இது எல்லாமே பாஜக எப்படியும் வெற்றிபெற்று விடும் என்ற நம்பிக்கையில் போடப்பட்டுள்ள கணக்கு. ஆளுவோர் மீதான இன்றுள்ள அதிருப்தி காரணமாக, ராஷ்ட்ரிய ஜனதாதளம்- காங்கிரஸ்- இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி வெற்றிபெற்று விட்டால்...? அப்போதும் நிதிஷ்கட்சியை தொலைத்துக் கட்டிய மகிழ்ச்சிபாஜகவுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கும் இது புரிகிறது என்றாலும், வேறு வழியில்லாமல் நடித்து வருகிறது. “லோக் ஜனசக்திக்கு எங்களுடன் இருக்கும் அந்த குறிப்பிட்ட கருத்தியல் வேறுபாட்டை அறியவிரும்புகிறோம்” என்று மூத்த தலைவர்ஏ. சவுத்ரி உள்ளிட்ட ஐக்கிய ஜனதாதளத் தின் தலைவர்கள் பலரும் தொடர்ந்து அப்பாவித் தனமாக பேட்டி அளித்துக் கொண்டிருக்கின்றனர்.