tamilnadu

கூடலூர் அருகே யானை தாக்கி பெண் பலி

உதகை, நவ 1- கூடலூர் கோக்கால் பகுதியில் தண்ணீர் எடுக்கச் சென்ற பெண் யானை தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் கோக்கால் பகுதியில் வசித்து வருபவர் கமலாட்சி(51). இவர் அதே பகுதியில் ஞாயி றன்று தண்ணீர் எடுப்பதற்காக சென்றுள்ளார். அச்சமயம், அங்கு உலாவிக்கொண்டிருந்த காட்டு யானை அவரை தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம், அப்பகுதி மக்க ளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதி யில் சுற்றித்திரியும் யானையை விரட்ட  பல முறை புகார் தெரிவித்தும்  வனத்துறையினர் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். பேருக்கு இரண்டு நாட்கள் மட்டும் வனத் துறையினர் ரோந்து என்ற பெயரில் வந்து செல்கின்றனர்.  இதனால், மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. எனவே, இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.