tamilnadu

img

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தூண்கள் மாயம்!

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தூண்கள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கலைநயமிக்க 222 கல்வெட்டு தூண்கள் உள்ள நிலையில் இரண்டு தூண்கள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
1992 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்த கோவிலில் ஆறரை கிலோ மதிப்புள்ள  தங்க நகைகள் திருடப்பட்டதால் 1995ஆம் ஆண்டு வரை இக்கோவில் பூட்டப்பட்டே இருந்தது அப்போது இந்த கல்தூண்கள் திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் கோவிலில் இருக்கக்கூடிய எந்த தூணை எடுத்தாலும் கட்டிடம் கீழே விழுந்துவிடும் அதை எடுப்பதற்கு வாய்ப்பில்லை என்று கோவில் நிருவாகிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிலை தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குனர் அபய் குமார் சிங் விசாரணை நடத்தி வருகிறார்.

;