tamilnadu

திருவள்ளூர், காஞ்சிபுரம் முக்கிய செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல்  தொல்லை கொடுத்தவர் கைது 
திருவள்ளூர், ஜன. 19- திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ராமதாஸ் 60.என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மிட்டாய் வாங்க வந்த அதே பகுதியைச்  சேர்ந்த 5 வயது சிறுமிக்கு இவர் பாலியல் தொல்லை  கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் சொன்னதையடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கவரப்பேட்டை காவல்துறையினர் 5 வயது சிறுமிக்கு பாலி யல் தொல்லை கொடுத்த பெட்டிக் கடைக்காரர் ராமதாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஜன.24 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரம், ஜன.13- காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் ஜன.24 ஆம் தேதி வெள்ளக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் ஆட்சியர் பொன்னையா தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட வேளாண்மைத்துறை அலுவ லர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உரிய பதில்  அளிப்பார்கள். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவ சாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்க ளின் பிரச்சனைகளை நேரடியாகவும், மனுக்கள் மூலமாக வும் தெரிவித்து தீர்வு பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

;