tamilnadu

திருப்பூர், சேலம் முக்கிய செய்திகள்

திருப்பூரில் சாலையோர இறைச்சிக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை

திருப்பூர், டிச. 22 - திருப்பூர் நகரில் சாலையோர இறைச்சிக் கடைகளில் உணவுப் பாது காப்புத் துறையினர் ஞாயிறன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு, சுகாதாரம் பேணுமாறு அறிவுறுத்தினர். திருப்பூரில் அவிநாசி சாலையில் குமார் நகர் தொடங்கி அவிநாசி வரை  ஞாயிற்றுக்கிழமைகளில் சாலை யோரங்களில் அதிகளவில் ஆடு,  கோழி இறைச்சி மற்றும் மீன் விற் பனை கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் குமார் நகர் தொடங்கி அவிநாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள இறைச்சி கடை களில் உணவு பாதுகாப்புத் துறை யினர் திடீர் சோதனையில் ஈடுபட் டனர். மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கே.விஜய லலிதாம்பிகை தலைமையில் அதி காரிகள் பெரியார் காலனி, குமார் நகர்,  திருமுருகன்பூண்டி, அவிநாசி உள் ளிட்ட பகுதிகளில் 29 மீன் விற்பனை கடைகள், 24 கோழி இறைச்சி கடைகள், 18 ஆடு இறைச்சி கடை களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உண்ண உகந்தவை இல்லை எனக் கருதப் பட்ட 4 கோழிகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. கடைகளில் வைக் கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள் பறி முதல் செய்யப்பட்டன.
கோழி இறைச்சி மீது கலர் சாயம் பூசக்கூடாது
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் கூறும்போது, இந்த  சோதனையின் போது உரிமம் இல் லாமல் செயல்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. உரிய விளக்கம்  பெறப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடைகளின் வளாகங்கள் சுத்தமாகவும், சுகாதார மாகவும் இருக்க வேண்டும். இறைச்சி களை ஈ மொய்க்காமல் பாதுகாப்பாக விற்பனைக்கு வைக்க வேண்டும். கோழி இறைச்சிகளின் மீது கலர்  சாயம் பூசக் கூடாது. நுகர்வோரின்  கண் பார்வையில் கோழிகளை வெட்டி  சுத்தம் செய்து கொடுக்க வேண்டும்.  வாழை இலையில் தான் இறைச்சி களை நுகர்வோருக்கு கட்டிக் கொடுக்க வேண்டும். கழிவுகளை வாய்க்காலில் கொட்டக் கூடாது. ஆடுகளை அவற் றுக்கான வதைக்கூடங்களில் மட்டுமே  வெட்ட வேண்டும் என உரிமையாளர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று உணவுப் பாதுகாப்புத் துறை யினர் தெரிவித்தனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் மதுபான கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை

சேலம்,டிச.22- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் காரணமாக மதுபானக் கடை களுக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகளுக் கான தேர்தல் டிச.27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடை பெறுகிறது.இதற் கான முன்னேற்பாட்டு பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனிடையே தேர் தல் நேரத்தில்  அசம்பாவிதங்களை  தவிர்க்கும் பொருட்டு,மாநிலம் முழு வதும் உள்ள மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது: சேலம் மாவட்டத்தில்  வரும் 27 மற்றும் 30ஆகிய தேதி களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறு கிறது.இதனையடுத்து டிச.25ம்  தேதி மாலை 5 மணி முதல் 27ம் தேதி  மாலை 5 மணிவரையிலும்,28ம் தேதி  மாலை 5 மணிமுதல் 30ம் தேதி மாலை  5 மணி வரையிலும் சேலம் மாவட் டத்தில் உள்ளமதுபானக்கடை களை மூட வேண்டும். இதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள ஜன.2ம் தேதியன் றும் மதுபானக்கடைகளை மூட வேண்டும்.தேர்தல் மற்றும் வாக்கு எண் ணிக்கை நடை பெறவுள்ள நாட்களில்  மதுபானம் விற்க்கக் கூடாது. இதனை மீறுபவர்களுக்கு அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்ப டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.