கல்லூரி சங்க துவக்க விழா தஞ்சாவூர் ஜூலை.15- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிக ஆட்சியல் துறை 2019-20 ஆம் ஆண்டு சங்க துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழா விற்கு, கல்லூரி முதல்வர்(பொ) எம்.முகமது முகைதீன் தலைமை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் என்.ஏ.முகமது பாருக், வணிக ஆட்சியல் துறைத் தலைவர் ஏ. முகமது நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை காயிதே மில்லத் கல்லூரிப் பேராசிரியர் ஜெ.ஹாஜா கனி பேசினார். முன்னதாக, கல்லூரி முன்னாள் முதல்வர் எம்.ஏ.முகமது அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் அ.கலீல் ரஹ்மான் அறிமுக உரை நிகழ்த்தினார். மாணவர் டி.எஸ்.அசோக் வரவேற்றார். மாணவர் பி.சேக் முகமது ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சிகளை பேராசிரியை எம்.கமருன் நிஹார் தொகுத்து வழங்கினார். மாணவர் ஜெ.அரிகரன் நன்றி கூறினார்.
லோக் அதாலத்: 145 வழக்குகளுக்கு தீர்வு
முசிறி, ஜூலை 15- முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் 145 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.4 லட்சத்து 70 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் முசிறியில் நடை பெற்ற லோக் அதாலத்திற்கு மாவட்ட உரிமை யியல் நீதிபதி வேலுச்சாமி தலைமை தாங்கி னார். ஓய்வு பெற்ற மாவட்ட உரிமையியல் முன்னாள் நீதிபதி மாரியாயி முன்னிலை வகித்தார். ஜீவனாம்சம், வராக் கடன், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட 145 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.4 லட்சத்தி 26 ஆயிரம் வசூலிக்கப்பட்டு சமரசம் செய்யப்ப ட்டது. மாவட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், வழக்கறி ஞர்கள் கலந்து கொண்டனர்.
சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
புதுக்கோட்டை ஜூலை 15- புதுக்கோட்டை புதிய பேருந்து நிலை யத்தில் இருந்து அரசு மகளிர் கல்லூரி செல்லும் சாலை ஓரத்தை சிலர் ஆக்கிரமித்து கடைகளை கட்டியிருந்த னர். இந்த சாலை வழியாகத் தான் அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு வரும் பொதுமக்கள் செல்ல வேண்டும். இதனால் மேற்படி ஆக்கிர மிப்பை அகற்றக் கோரி பல்வேறு தரப்பி னரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நி லையில், மாணவிகள் மற்றும் பொதுமக்க ளுக்கு இடையூறாக ஆக்கிரமித்து அமை க்கப்பட்டிருந்த கடைகளை நகராட்சி ஆணையர் ஜீவா.சுப்பிரமணியன் தலை மையில் திங்கள் கிழமை அகற்றப்பட்டது.