“அரசியல், பொருளாதார பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் மதமாற்றம் செய்வீர்களானால், மக்களின் குறைந்தபட்ச தேவைகளைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாது. மதத்திற்குப் புத்தரை வணங்கிவிட்டு வயிற்றுக்கு நான் எங்கே போவேன்? வெறும் மதத்தை மட்டும் பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நடைமுறையில் அத மக்களுக்கு விடுதலை தருமா, என்ற கேள்வியும் எனக்கு உள்ளது” என்று ‘நீலம்’ இணைய இதழுக்கு அளித்த நேர்காணலில், எழுத்தாளர் கோ. ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.