tamilnadu

img

தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை

தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தமிழகம் புதுச்சேரியில் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில் இன்று பிற்பகல் எழிலகத்தில் உள்ள புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி நிவர் புயல் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அறிவித்தார்.  எனினும் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மட்டும் பணிக்கு வருவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

;