மகாராஷ்டிரா, ஜூன் 24- நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை தந்தையே அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த சாதனா என்ற சிறுமியை அடித்தே கொலை செய்த தந்தை தோந்திராம் போஸ்லே என்பவர் சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளியில் உடற்கல்வி ஆசியராக பணிபுரிந்து வரும் தோந்திராம் போஸ்லே இரவு முழுவதும் சிறுமியைக் கம்பால் அடித்து, உதைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.