இஸ்ரேல்- ஈரானுக்கு இடையே நடந்து வந்த போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று கூறி கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் முன்னறிவிப்பின்றி தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும் பதிலடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரான் தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை. ஈரானின் மின்சாரம் மற்றும் எரிசக்திகாக மட்டுமே யுரேனியத்தை செறுவூட்டுகிறோம் என்றது. சர்வதேச அணுசக்தி முகமையின் அறிக்கையும் ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்கவில்லை என்றது.
ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தாங்கள் சொல்லும் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும், இல்லையென்றால் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எனவும் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஈரான் ஒருபோதும் பணியாது என்று ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனி பதிலடி கொடுத்தார்.
இதனிடையே ஈரானும்., இஸ்ரேலும் தொடர்ந்து ஏவுகணை தாக்கதல் மோதி கொண்டனர். இந்தப்போரில் அமெரிக்காவையும் இணைக்க இஸ்ரேல் தொடர்ந்து முயற்சி வந்தது.
ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினாலும், ஈரானின் அணுசக்தி நிலையங்களை பெரிய அளவிற்கு சேதப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் ஈரான் கிட்டதட்ட தங்களின் அணுசக்தி நிலையங்களை பூமிக்கு 200 கி.மீட்டருக்கு கீழே அமைத்துள்ளதால் இஸ்ரேலால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்கி அழிக்கமுடியவில்லை.
பூமிக்கு 200 கி.மீட்டருக்கு கீழே உள்ள அணுசக்தி நிலையங்களை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டுகள் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளதாக கருதப்படுகிறது. அதனால் இந்தப்போருக்கும் அமெரிக்காவை இழுத்துவிட இஸ்ரேல் நினைத்த எண்ணம் அமெரிக்கா ஈரானை தாக்கியதன் மூலம் நிறைவேறியது.
அமெரிக்கா ஈரானை தாக்கியதை அடுத்து, மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் அதிகரித்தது. அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து, ஏமனும் அதிகாரப்பூர்வமாக போருக்குள் நுழைவதாக அறிவித்தது.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும் உடனடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. மேலும் கத்தார் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து, முக்கிய கச்சா எண்ணெய் வர்த்தக போக்குவரத்து வழிகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
உலகில் 20% கச்சா எண்ணெய் ஹார்முஸ் நீரிணை வழியாக கொண்டுசெல்லப்படுவதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்ற அச்சம் நிலவியது. இந்த பாதையை மூட வேண்டாம் என்று ஈரானிடம் சொல்லுங்கள் என சீனாவிடம் கெஞ்சியது.
இதனிடையே இஸ்ரேல்- ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும் ஒப்புக்கொண்டது. ஆனால் ஈரான் தரப்பிலிருந்து ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை இல்லை முதலில் கூறியது. அதற்குப்பிறகு இஸ்ரேல் உடனான போரை நிறுத்துவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இருப்பினும், போர் நிறுத்தத்திற்கு பிறகு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
ஈரானும், போர் நிறுத்தத்திற்கு பிறகு இஸ்ரேல் மூன்று முறை ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
போர் நிறுத்தத்தை தொடர்ந்து, ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம் என்று ஜனாதிபதி டிரம்ப் இஸ்ரேலை எச்சரித்துள்ளார்.