india

img

சமஸ்கிருதத்துக்கு 17 மடங்கு அதிக நிதி - ஆர்.டி.ஐ தகவல்

கடந்த 10 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய 5 செம்மொழிகளின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கு அதிக நிதியை ஒன்றிய பாஜக அரசு ஒதுக்கியது ஆர்.டி.ஐ தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது.
2014-15 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில் சமஸ்கிருதத்திற்கு ரூ.2,532.59 கோடியும் (ஆண்டுக்கு ரூ.230.24 கோடி) ஒதுக்கீடு. இதுவே தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற 5 செம்மொழிகளுக்கு ரூ.147.56 கோடி (ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி) மட்டுமே ஒதுக்கீடு. சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு ஒதுக்கீடு.