வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்ட இருக்கைகள் மற்றும் பயணிகளின் உடமைகள் நனைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் (PNR: 2137164305) பயணித்த பயணி ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி வேலை செய்யவில்லை என்றும், மேற்கூரையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது; பிரீமியம் கட்டணம் செலுத்தியும் தான் மிகவும் அசௌகரியமான பயணம் மேற்கொண்டதாக பதிவிட்டுள்ளார்.
மேலும், பலர் புகார்களை பதிவு செய்த நிலையில், ரயில்வே நிற்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் மற்றும் ஐஆர்சிடிசி எக்ஸ் பக்கங்களை டேக் செய்து அவர் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.