tamilnadu

img

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் திருநங்கை, திருநம்பிகளுக்கு தளர்வு!

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருநங்கை, திருநம்பிகளுக்கான நிபந்தனைகளை தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. பட்டயம், தொழிற்படிப்பு படிக்கும் திருநங்கை, திருநம்பிகளும் இத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் திருநங்கை, திருநம்பிகள் அனைவரும், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக சமர்ப்பித்து உயர்கல்வி நிறுவனத்தின் மூலம் UMIS இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தெரிவித்துள்ளது.