பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக புதனன்று (ஜூலை 31) சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தை தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (டிட்டோஜாக்) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.