tamilnadu

img

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை, ஜூன் 19- இலங்கைக் கடற்படையின ரால் ஜூன் 18 அன்று கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு ஜூன் 19 அன்று கடி தம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த  நான்கு மீனவர்கள் இலங்கைக் கடற்படை யினரால் ஜூன் 18 அன்று கைது செய்யப் பட்டு, அவர்களது மீன்பிடி படகுகள் கைப் பற்றப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டியுள் ளார். இத்தகைய சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதில் மட்டுமல்லா மல், மீனவ சமுதாயத்தினரி டையே அச்ச உணர்வையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற் படுத்துவதாகவும் கவலைப்படத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தற்போது 15 மீனவர்களும், 162 மீன்பிடிப் படகுகளும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர் களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளை யும் உடனடியாக விடுவித்து உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசை  வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முத லமைச்சர் மு.க ஸ்டாலின், ஒன்றிய வெளியுற வுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.