வெற்றிபெற்ற இந் தியா கூட்டணியின் வேட்பாளர்கள் ஜூன் 6 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலினை சந் தித்து வாழ்த்து பெற்றனர். உற்சாக வரவேற்பு
வெற்றி வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க தனது முகாம் அலுவலகத்திலிருந்து, அண்ணா அறிவாலயம் வந்த முதலமைச்ச ருக்கு வழிநெடுகிலும் பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க, எழுச்சிமிகு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
டி.ஆர். பாலு, கனிமொழி, ஆ. ராசா, தயாநிதி மாறன், எஸ். ஜெகத்ரட்சகன், கலாநிதி வீரா சாமி, தமிழச்சி தங்கபாண்டியன், க. செல்வம், கதிர் ஆனந்த், ஆ. மணி, சி.என். அண்ணாதுரை, தரணிவேந்தன், மலையரசன், டி.எம். செல்வகணபதி, பிரகாஷ், கணபதி ராஜ்குமார், ஈஸ்வர சாமி, அருண் நேரு, முரசொலி, தங்க. தமிழ்ச்செல்வன், ராணி ஸ்ரீகுமார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ். ஜோதிமணி, ஆர். சுதா, கே. கோபிநாத், விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத், சசிகாந்த் செந் தில், ராபர்ட் புரூஸ், வைத்தி லிங்கம் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பெர்ட்.
சிபிஎம்-சிபிஐ
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன், இரா. சச்சிதானந்தம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே. சுப்ப ராயன், வை. செல்வராஜ் மற்றும் மதிமுக துரை வையாபுரி, ஐயு எம்எல் நவாஸ் கனி ஆகியோர் முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, அமைச்சர் க. துரை முருகன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே. பாலகிருஷ்ணன், காங்கி ரஸ் தலைவர் கு. செல்வப்பெருந் தகை, சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ஐயுஎம்எல் தேசி யத் தலைவர் கே.எம். காதர் மொய்தீன், ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் வசீகரன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.