ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜுவல்லரி பேலஸ்
ஓசூரில் புதிய கிளை திறப்பு
கிருஷ்ணகிரி, ஏப். 16- கிருஷ்ணகிரியில் 85 ஆண்டுகளாக இயங்கி வரும் பாரம்பரியம் கொண்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜுவல்லரி பேலஸ் நிறுவன த்தின் புதிய கிளை திங்க ளன்று (ஏப்.14) ஓசூர் பாக லூர் சாலையில் திறக்கப் பட்டுள்ளது. இந்த கிளை திறப்பு விழா வில் ஓசூர் சட்டமன்ற உறுப்பி னர் ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் என்.எஸ்.மாதே ஸ்வரன், வியாபாரிகள் சங்க தலைவர் பெரிய தம்பி செட்டி யார் நிறுவனத்தின் உரிமை யாளர் தாமஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு, ஓசூர் ஸ்ரீ வெங்க டேஸ்வரா ஜுவல்லரி பேலஸ் உரிமையாளர்கள் எம்.பி.ரமேஷ்,வாரிசுகளான பி.ஆர். விஷ்ணு,பி.ஆர்.விஷால் ஆகியோரை வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி நிறுவனத்தின் தலைவர் எம்.பி.ரமேஷ் பேசுகையில், கிருஷ்ணகிரியில் உள்ளதை போன்று ஓசூர் ஸ்ரீ வெங்க டேஸ்வரா ஜூவல்லரி பேல ஸிலும் பலவிதமான நகை கள் எண்ணற்ற விதவித மான வடிவங்களில் கலை நயத்துடன் அனைத்து வித மான விழாக்களுக்கும் ஏற்றார் போன்ற தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆபர ணங்கள் மூன்று தளங்க ளிலும் கிடைக்கும் என்றார். திறப்பு விழா சலுகை திறப்பு விழா சலுகை யாக அதிரடி தள்ளுபடியாக வெள்ளி கால் கொலுசுகள், வெள்ளி பாத்திரங்களுக்கு செய்கூலி சேதாரம் இல்லை. 916 கேடிஎம் தங்கம் ஒரு சவ ரனுக்கு ரூ.3ஆயிரம் தள்ளு படியும் ,வைர நகை கேரட்டுக்கு ரூ.15 ஆயிரமும் தள்ளுபடி என அனைத்து நகைகளுக்கும் 15 விழுக் காடு தள்ளுபடியும் தரப்படு கிறது. இந்த சலுகை,மே 14 ஆம் தேதி வரை நீட்டிக்க ப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.