சென்னை, ஆக. 3 - காவிரியில் வெள்ளம் கரை புரண்டோடும் நிலையில், கரை யோர மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 1056 பேர், ஈரோடு மாவட்டத்தில் 317 பேர், கடலூர் மாவட்டத்தில் 53 பேர், கரூர் மாவட்டத்தில் 30 பேர், தஞ்சா வூர் மாவட்டத்தில் 40 பேர், தர்ம புரி மாவட்டத்தில் 35 பேர் என மொத்தம் 1,531 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்க ளுக்கு மருத்துவ உதவி அளிக்கும் வகையில் மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு காய்ச்சல், இருமல், சளி, தோல் நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் இருப்பின் அவற்றுக்கு தக்க மருத்துவ ஆலோசனையும் மருந்து மாத்திரைகள் வழங்கப் பட்டு வருகின்றன.
மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களு க்கு மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் பரிசோ தனை செய்யப்பட்டு உரிய மருத் துவ ஆலோசனையும், தொடர் சிகிச் சையும் வழங்கப்பட உள்ளது.
இதற்காக பாராசிட்டமால் ஆண்டிபயாடிக் மாத்திரைகள் மற்றும் ஓஆர்எஸ் பொட்டலங்கள் உரிய அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் வெள்ள பாதிப்பின் போது ஏற்படக்கூடிய காயங்கள், விஷக்கடி, பாம்புக் கடி போன்ற நிகழ்வுகளுக்கு அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஏதேனும் அசம்பா விதங்கள் ஏற்படாமல் இருக்க 108 அவசர ஊர்தி வாகனங்கள் மாவட் டம் தோறும் தயார் நிலையில் உள்ளன.
வெள்ளப்பெருக்கு நேரங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை:
சுத்தம் பேணுதல் – கைகளை சோப்புப் போட்டுக் கழுவ வேண் டும். கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். இணை நோய் உள்ளவர்கள் வேலைக்கு மருந்து களை உட்கொள்வதுடன், சரியான அளவு உணவை உட்கொள்ள வேண்டும். குழந்தைகளை வெள்ள நீரில் அல்லது அருகில் விளையாட அனுமதிக்கக் கூடாது; கொசுக்களால் பரவக்கூடிய டெங்கு, மலேரியாவை தடுக்க கொசு வலைகளை பயன்படுத்தவேண்டும்.
வெள்ள நேரங்களில் செய்யக் கூடாதவை:
வதந்திகளால் தவறாக வழிநடத் தப்படுவதைத் தவிர்க்க வேண்டும். மீட்புப் பணியாளர்கள் தெரிவிக்கும் வரை தங்குமிடங்களை விட்டு வெளியேற வேண்டாம்.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறையினரால் மழைக்காலக் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு சென்று உடல் உபா தைகளான காய்ச்சல், சிறு காயங் கள், வெட்டு காயங்கள், சளி, இரு மல், தும்மல், கை கால் வலி போன்ற உபாதைகளுக்கு சிகி ச்சை எடுத்துக் கொண்டு பயன்பெறு மாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். காவிரி கரையோர மாவட்ட மக்கள் வெள்ளப்பெருக்கு காரண மாக பாதிக்கப்படாத வகையில் உட னடியாக வெள்ளிக்கிழமை (ஆக.2) அன்று 37 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.