tamilnadu

img

பண்டிகை காலங்களில் மக்கள் நலன் என்ற பெயரில் தனியார் பேருந்தை ஊக்குவிப்பது சரியல்ல - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

போக்குவரத்துறையில், நேரடியாகவோ மறைமுகமாகவோ தனியார்த்துறையை அனுமதிக்க வேண்டாமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

எதிர்வரும் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பது சிறப்பானது. ஆனால், இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்திற்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு முன்வந்துள்ள நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல.

தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு போக்குவரத்துக் கழகங்களின் சேவை முக்கிய பங்களிப்பு செய்துள்ளதை யாரும் மறுக்க இயலாது. குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடும் முக்கிய காரணமாகும். அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கு திட்டமிடுவதற்கு பதிலாக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, அரசுக்கோ, பொதுமக்களின் நலனுக்கோ வலுசேர்க்காது. இது எதிர்காலத்தில் பொதுப்போக்குவரத்தினை தனியாருக்கு விடும் நிலை ஏற்பட்டு விடும்.

ஆகவே, தமிழக அரசு குறிப்பாக போக்குவரத்துறையில், நேரடியாகவோ மறைமுகமாகவோ தனியார்துறையை அனுமதிக்க வேண்டாமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.