சென்னை,செப்.25- தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
முன்னாள் ஒன்றிய அமைச்சர் தயாநிதி மாறன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார். இதனைத் தொடர்ந்து, தயாநிதிமாறன், எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள் ளார். இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று இபிஎஸ் தாக்கல் செய்த மனு விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கு அக்டோபர் 16 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.