மது பாட்டில்களை இருசக்கர வாகனத்தில் கடத்திய நபர் கைது
விழுப்புரம், அக்.17- கோட்டகுப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரங்கநாதபுரம் பகுதியில் காவல் ஆய்வாளர் அறிவழகி மற்றும் காவலர்கள் மதுவிலக்கு சம்பந்தமாக வாகன தணிக்கை செய்த போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 103 புதுச்சேரி மதுபான பாட்டில்கள் 180 மில்லி கொண்ட கடத்தியது தெரிய வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விழுக்கம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் நடராஜ் (37) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 103 புதுச்சேரி மதுபான பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.
