tamilnadu

“அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எந்தச் சட்டம் உரிமை அளித்தது?”

“அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எந்தச் சட்டம் உரிமை அளித்தது?”

ஈரான் நாட்டின் உயர் தலைவரை படுகொலை செய்ய அமெ ரிக்கா, இஸ்ரேலுக்கு எந்தச் சட்டம் உரிமை அளித்தது? என “இந்தி யா” கூட்டணி ஆட்சி செய்யும் ஜம்மு- காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”ஈரான் மக்கள் தங்களின் தலைமையை அவர்களே தீர்மானிக்க வேண்டும். அது அவர்கள் நாடு. இதில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக் கூடாது. ஈரான் நாட்டின் உயர் தலைவர் காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரை படுகொலை செய்ய அமெரிக்காவிற்கும் இஸ்ரே லுக்கும் எந்தச் சட்டம் உரிமை அளித்தது?  காமேனி படுகொலை விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் நிலைமையை மோசமாக்க வேண்டாம். வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத் துள்ளார்.