சென்னை, மே 17 - சொந்த நாட்டின் விண் கலங்களை மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் விண்கலங்களையும் குறைந்த செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநி லம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவு தளத்தை தொடர்ந்து தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குல சேகரப்பட்டினத்தில் 2-ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படு கிறது. இதற்காக குலசேகரன் பட்டினம் சுற்றுவட்டார பகுதியில் கடலோரத்தில் அரைவட்ட வடி வில் 2,376 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டு, ரூ. 950 கோடி செல வில் அதற்கான பணிகள் நடை பெற்று துவங்கியுள்ளன.
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய இருப்ப தையொட்டி, இதே பகுதியில், ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிப் பது, மின்னணு, பொறியியல் கட்ட மைப்புகள் மற்றும் ராக்கெட் தொடர்பான பல்வேறு கட்டமைப்பு களை உருவாக்கும் தொழிற் சாலைகளை அமைக்கும் வகை யில், விண்வெளி தொழிற் பூங்கா திட்டத்தை தமிழக அரசு அறி வித்தது.
இதற்காக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ), இஸ்ரோவின் ‘இன் ஸ்பேஸ்’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்நிலையில், குலசேகரப் பட்டினத்தில் 1,500 ஏக்கர் பரப்பில் விண்வெளி ஆய்வு மை யத்திற்கு அருகில் விண்வெளி தொழிற்சாலை, உந்து சக்தி பூங்கா அமைய உள்ளது. இதற்காக விண் வெளி பூங்கா அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவ தாக டிட்கோ தெரிவித்துள்ளது.