கொரோனா தடுப்பு குறித்த ஆய்வில் தகவல்
புதுதில்லி, செப். 15 - இணையப் பயன்பாடு அதிகமுள்ள காரணத்தால் கொரோனா குறித்த தவறான தகவல்கள் பகிரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ‘138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்றும் மூல பகுப்பாய்வு’ என பெயரிடப்பட்ட ஆய்வு சாகே நூலக சங்கம் மற்றும் நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 138 நாடுகளில் பகிரப்பட்ட 9,657 தவறான தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு நாடுகளில் கொரோனா குறித்து பகிரப்படும் செய்திகள் உண்மையானதா? அல்லது பொய்யானதா? எனக் கண்டறியும் வகையில் 94 அமைப்புகள் இந்த ஆய்வில் ஈடுபட்டது. இதுகுறித்து வெளியான ஆய்வில், “ஆய்வு மேற்கொள்ளப் பட்ட நாடுகளில், சமூக வலைதளங்கள் மூலமாக பரவும் 18.07 சதவீத பொய்யான தகவல்கள் இந்தியாவிலிருந்து பரப்பப்பட்டுள் ளது. இணையப் பயன்பாடு அதிகமுள்ள காரணத்தாலும் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தியதாலும், இணைய தள பகிர்வுகள் குறித்து போதிய கல்வியறிவு (விழிப்புணர்வு) இல்லாததாலும் இது நிகழ்ந்திருக்கலாம்” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. கொரோனா குறித்து தவறான தகவல்கள் பகிரப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா(15.94 சதவீதம்), அமெரிக்கா(9.44 சதவீதம்), பிரேசில் (8.57 சதவீதம்), ஸ்பெயின்(8.03சதவீதம்) ஆகியவை இடம்பெற்றுள் ளன. கொரோனா குறித்த தவறான தகவல்களைப் பரப்பியதன்மூலம் ‘‘சமூக ஊடகங்கள் (Social Media) (84.94 சதவீதம்), இணையம் (Internet) (90.5 சதவீதம்), முகநூல் (Face Book) (66.87 சதவீதம்) தவறான தகவலை உருவாக்குகின்றன என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. கொரோனா குறித்த தவறான தகவல்களைப் பரப்பி மக்களை அச்சத்தில் ஆழ்த்துவதாக எச்சரித்துள்ள உலக சுகாதார நிறுவனம், மக்கள் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்குமாறும் வலியுறுத்தியுள்ளது.