tamilnadu

img

ரஷ்ய தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவு... ஸ்டாலின் இரங்கல்....

சென்னை:
ரஷ்ய நாட்டு தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி கொரோனா பாதிப்பால் மாஸ்கோவில் காலமானார். அவருக்கு வயது 79.1941-ல் பிறந்த அலெக்சாண் டர் துப்யான்ஸ்கி மாஸ்கோ அரசுப் பல்கலைக் கழகத்தில் 1970-ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்.தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் நல்ல புலமை பெற்ற துப்யான்ஸ்கி மறைவுக்கு தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.துப்யான்ஸ்கியின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்த ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் - ஆய்வாளர் - பேராசிரியர் அலெக்சாண் டர் துப்யான்ஸ்கி கொரோனா பெருந்தொற்றால் மறைவெய்தியது ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.பொன்னியும் வைகையும் பொருநையும் இன்னும் பல ஆறுகளும் பாய்ந்து வளம் செழிக்கச் செய்த தமிழ்ப் பண்பாட்டினை, இலக்கியத்தினை, வரலாற் றினை, வால்கா நதி பாயும் ரஷ்யாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் பயிற்றுவித்தவர் துப் யான்ஸ்கி.

சோவியத் யூனியனில் இருந்த பகுதிகள் தனித்தனியாகப் பிரிந்தபிறகு, அங்கே தமிழ்மொழி சார்ந்த பதிப்புகள் குறைந்துபோன நிலையில், துப்யான்ஸ்கி தன் சொந்த முயற்சியாலும் ஆய்வுப் பார்வையாலும் தமிழ் வளர்க்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந் தது போற்றுதலுக் குரியதாகும்.அரை நூற்றாண்டு காலமாகத் தமிழ் ஆய்வுப் பணியை மேற் கொண்டு, புதிய பார்வையுடன் பல கட்டுரைகளை வழங்கிய துப்யான்ஸ்கி வாயிலாகத் தமிழ் மொழியை அறிந்துகொண்ட மேல்நாட்டவர் ஏராளம்.2010 ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் கோவையில் நடைபெற்ற செம்மொழி ஆய்வு மாநாட்டில் பங்கேற்று, தொல்காப்பியம் குறித்த ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்து, தலைவர் கருணாநிதியின் அன்பைப் பெற்றவர்.துப்யான்ஸ்கியின் இறப்பு தமிழ் மொழி ஆய்வுத் தளத்தில் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மேற்கொண்ட பணிகளைத் தொடர்ந்திடச் செய்வதே அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாகும்.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கி.வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ரஷ்ய நாட்டு தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி  காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறோம்.ஏறத்தாழ 50 ஆண்டுகளாக ஒரு தனி மனிதராக நின்று  - தனிமரம் தோப்பாகும் என்று காட்டும் தன்னிகரற்ற தமிழ்ப் பரப்பும் தமிழ்த் தொண்டினை அமைதியாக ஆரவாரமின்றி நடத்தி வந்தார்.தமிழ்நாட்டுக்கு நல் அறிமுகமாகி 10 பல்கலைக் கழகங்களில் இளங்கலை மாணவர்களுக்கு தமிழ் கற்பித்த மாபெரும் சாதனையாளர் அவர், சீரிய தமிழ்த் தொண்டர்!ரஷ்ய கலாச்சார மய்யத்தின் செயல் வீர செம்மல் தோழர் தங் கப்பன் மூலம் அவர்பற்றி நாம் அறிவோம்.பெரியார் - மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக் கழகத்தில் முன்பு ரஷ்ய மொழி கற்பித்தப்போது அவர் ஒரு செயலூக்க சிந்தனையாளராகவே எமது அமைப்பிற்குத் தென்பட்டார்.அவரது மறைவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் எளிதில் நிரப்பப்பட முடியாது.ரஷ்ய தமிழறிஞர் துப் யான்ஸ்கிக்கு அப்பல்கலைக் கழகம் தக்க மரியாதை செய்யும்.அவருக்கு நமது வீர வணக்கம்” என்று குறிப் பிட்டுள்ளார்.

;