சென்னை, டிச.9- உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டப் பேரவையில் முதல் வரிசையில் 3ஆவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், அவை முன்ன வர் துரைமுருகனுக்கு அடுத்தபடி யாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டா லினுக்கு 3-ஆவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ-வாக வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு வந்த உதய நிதிக்கு, 3-ஆவது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டி ருந்தது. அதன்பின்னர், தமிழக இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது, அவருக்கு முதல் வரிசையில் 10-ஆவது இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், துணை முதல்வராக இருக்கும் அவருக்கு தற்போது பேரவையில் முதல் வரிசையில், மூன்றாவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.