வங்கக்கடலில் மீண்டும் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
சென்னை,டிச.6- தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி பெஞ்சால் புயலாக வலுப்பெற்று மாமல்லபுரம்- புதுச்சேரி இடையே சமீபத்தில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த பின்னும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டியது. விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை பெய்தது. இன்னும் இந்த மாவட்டங்கள் மழை பாதிப்பில் இருந்து மீளவில்லை.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் சனிக்கிழமை (டிச.7) புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதியை வரும் 9 ஆம் தேதி நெருங்கும் என்றும், அதன் பிறகு வரும் 12 ஆம் தேதி இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளது. இதன் காரணமாக வரும் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம்: 2 பேர் மீது வழக்குப்பதிவு!
சென்னை,டிச.6- அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரத்தில் இருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெஞ்சால் புயலால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை எனக் கூறி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பொன்முடி சென்றார். அவரு டன் அவரது மகன் கௌதம சிகாமணி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் சென்றனர். அப்போது அவர் மீது சிலர் சேற்றை வீசினர். இந்த நிலையில், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது சேற்றை வீசியதாக இருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புயல் நிவாரணம்:
திமுக எம்.பி.க்கள் தலா ரூ. 1லட்சம் வழங்க முடிவு
சென்னை,டிச.6- வங்கக்கடலில் உரு வான பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை யும், உடமைகளையும் இழந்த மக்களுக்கு உதவும் வகையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலரும் தங்களால் இயன்ற உதவி களை செய்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தமது ஒரு மாத ஊதி யத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்கினார்.
இந்த நிலையில்,தி.மு.க. எம்.பி.க்களும் நிதி வழங்க முடிவு செய்துள்ளனர். மக்க ளவை மற்றும் மாநிலங்கள வை திமுக எம்.பி.க்கள் தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி யாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக டி. ஆர்.பாலு தகவல் தெரிவித் துள்ளார்.
115 அடியை தாண்டிய மேட்டூர் அணை
மேட்டூர்,டிச.6- காவிரி நீர் பிடிப்பு பகுதி யில் பெய்த தொடர் மழை யால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.58 அடியில் இருந்து 115.32 அடியாகவும், நீர் இருப்பு 85.09 டிஎம்சி யில் இருந்து 86.20 டிஎம்சி யாகவும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், நீர்வளத்து றை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயா ளகுமார், வெள்ளியன்று அணையில் ஆய்வு மேற் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில், காவிரி நீர் தேக்கப் பகுதிகளில் நீர் பச்சை நிற மாக மாறியதற்கு விவசாய பணிகள் மற்றும் அதன் ரசாயன கழிவுகள்தான் கார ணம். மேட்டூர் அணை பூங்கா வில் சேதமடைந்த விளை யாட்டு உபகரணங்கள் விரை வில் சரி செய்யப்படும். டெல்டா மாவட்டங்களில் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேரில் விவசாய பணிகள் நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.