கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆர்.கே.எஸ் கல்லூரியில் தேசிய வாக்காளர் தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்வீக்டர் முன்னிலை வகித்தார். தாசில்தார் ரகோத்தமன், வாருவாய் ஆய்வாளர் சுகந்தி, வி.ஏ.ஓ அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.