tamilnadu

img

உத்தரகண்ட்டில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரிகள் 33 பேருக்கு கொரோனா தொற்று

உத்தரகண்ட் மாநிலத்தில்  லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி பயிற்சியாளர்கள் 33 பேருக்கு சனிக்கிழமை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையம் 10 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு விடுதிகள், அலுவலகங்கள், நூலகம் என அனைத்து இடங்களிலும் கிருமி நாசினிகளை தெளித்து வருவதாக நிர்வாகம் இயக்குனர் சஞ்சீவ் சோப்ரா கூறியுள்ளார்.

அகாடமியின் வளாகத்தில், தற்போது 95 ஆவது அறக்கட்டளையில், இந்திய நிர்வாக சேவை (ஐ.ஏ.எஸ்), இந்திய காவல்துறை சேவை (ஐ.பி.எஸ்), இந்திய வன சேவை (ஐ.எஃப்.எஸ்) மற்றும் இந்திய வருவாய் சேவை (ஐ.ஆர்.எஸ்) ஆகியவற்றின் 428 பேர் பயிற்சி அதிகாரிகள் உள்ளனர். இதில், 150 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களும் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

;