ஆலந்த் தொகுதியிலும் வாக்கு திருட்டு
12 முறை கடிதம் எழுதியும் பதில் அளிக்காமல் கண்டு கொள்ளாத தேர்தல் ஆணையம்
பெங்களூரு தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டு தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் நீடிக்கிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்தி சமீபத்தில் குற்றம்சாட்டினார். அவரது குற்றச்சாட்டில் 2024ஆம் ஆண்டு மக்களவை மற்றும் அதனையொட்டி நடை பெற்ற மாநில சட்டமன்ற தேர்தல்களில் வாக்கா ளர் நீக்கம் மற்றும் சேர்ப்பு உள்ளிட்ட “வாக்குத் திருட்டு” மூலமே பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வருகிறது எனக் கூறினார். இந்நிலையில், 2023ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தலிலேயே பாஜக வாக்குத் திருட்டுச் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளது. இந்த சம்பவம் 2 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டு, அம்மாநில அரசு விசாரணை க்கு உத்தரவிட்டதால், பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின்பு முறைகேட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அமைதியால் வாக்குத் திருட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 5,994 விண்ணப்பங்கள் போலியானவை 2023ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்ட மன்றத் தேர்தலுக்கு முன்பாக ஆலந்த் சட்ட மன்றத் தொகுதியில் 6,018 வாக்காளர்களை நீக்க “படிவம்-7” விண்ணப்பங்கள் அளிக்கப் பட்டுள்ளன. இதில் வெறும் 24 விண்ணப்பங்கள் மட்டுமே உண்மையானவை. மற்ற 5,994 விண்ணப்பங்கள் போலியானவை என்றும், வாக்காளர்களுக்கே தெரியாமல் அவர்களை நீக்க “படிவம்-7” விண்ணப்பங்கள் அளிக் கப்பட்டுள்ளதும் அம்பலமாகி உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஆலந்த் சட்ட மன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் சகோதரருக்கு வாக்காளர் நீக்க விண்ணப்பம் (“படிவம்-7”) அளிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் விசாரித்த போது வாக்குச்சாவடி அதிகாரி,”வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கம் செய்வதற்கான முறைகேடு” என எச்சரித்துள்ளார். இதையடுத்து ஆலந்த் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான பி.ஆர்.பாட்டீல் (தற்போது எம்எல்ஏ) தேர்தல் நடக்கும் முன்னரே இந்த வாக்குத் திருட்டு முறைகேட்டை அம்பலப் படுத்தினார். 2023ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்த லில் பாஜக தோல்வி அடைந்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து கர்நாடக காங்கிரஸ் அரசு சிறப்பு புலனாய்வுக் குழு (சிஐடி) விசாரணைக்கு உத்தரவிட்டது. எல்லாம் போலி இந்நிலையில், சிஐடி விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி யுள்ளன. அதில், ஆலந்த் சட்டமன்ற தொகுதி யில் வாக்காளர் பெயர் நீக்கத்திற்காக விண் ணப்பித்தவர்களிடம் விசாரித்த போது அவர்கள், தாங்கள் அப்படி எதுவும் விண்ணப்பிக்க வில்லை என்று கூறியுள்ளனர். தனித்தனியாக மட்டுமின்றி பலரது குடும்பங்களில் உள்ள ஒட்டுமொத்த வாக்காளர்கள் பெயர்களை யும் நீக்க “படிவம்-7” மூலம் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் வாக்கா ளரின் பெயரில் இல்லாமல் வேறொரு வாக்காளரின் பெயரில் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. அப்படி விண்ணப்பித்தவர்களிடம் நேரில் சென்று விசாரித்த போது, தாங்கள் யார் பெயரையும் நீக்க விண்ணப்பிக்கவில்லை என்றும், விண்ணப்பத்தில் உள்ள செல்போன் எண் தங்களுடையது இல்லை என்றும் தெரிவித்தனர். குறிப்பாக விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் தேசிய வாக்காளர் சேவை போர்டல் (NVSP) இணையத்தளம் மற்றும் கருடா செயலி மூலமாகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தற்காலிக இணையதள முகவரி அதேபோல விண்ணப்பிக்கப்பட்ட செல் போன் எண்கள் மகாராஷ்டிரா, ஆந்திராவை சேர்ந்தவை ஆகும். தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்திலோ, செயலியிலோ தாங்கள் பதிவு செய்யவில்லை என செல் போன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மிக முக்கியமாக செல்போன் எண்களின் உரி மையாளர்கள் பெரும்பாலும் இணையத்தை பயன்படுத்தவே தெரியாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து விண்ணப்பம் அளித்தது யார்? எங்கிருந்து பெறப்பட்டது? ஐபி முகவரி உள்ளிட்டவற்றை தேர்தல் ஆணையத்திடம் கர்நாடகா சிஐடி கோரி யது. ஆனால் தேர்தல் ஆணையம் அளித்த தரவுகளை ஆராய்ந்தபோது போலி வாக்காளர் நீக்க விண்ணப்பம் செய்தவர்கள் டைனமிக் ஐபி-களை (தற்காலிக இணையதள முகவரி) பயன்படுத்தியது தெரியவந்தது. டைனமிக் ஐபி மூலம் விண்ணப்பித்த வர்களை கண்டறிவது மிக கடினம் என்பதால் விண்ணப்பங்கள், தேர்தல் ஆணையத்துக்கு வந்து சேர்ந்த கணினி முகவரி விவரங்களை கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு சிஐடி 12 முறை கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், இது நாள் வரையில் கோரிய தரவுகளை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. ஓடிபி இல்லாமல் விண்ணப்பிக்கும் முறை குறித்த கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் மவுனத்தால் பல்லாயி ரக்கணக்கான போலி வாக்காளர்கள் நீக்கம் குறித்த விசாரணை இரண்டரை ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.