states

img

‘ஜன் விஸ்வாஸ் மசோதா’ மக்களவையில் நிறைவேற்றம்

‘ஜன் விஸ்வாஸ் மசோதா’ மக்களவையில் நிறைவேற்றம்

இந்தியாவில் தொழில் புரிவதை எளிதாக்கவும், மக்களின் வாழ்க் கைத் தரத்தை மேம்படுத்த உத வும் என்று கூறி,  ஒன்றிய பாஜக அரசு ‘ஜன் விஸ் வாஸ் (நிபந்தனை கள் திருத்தம்) மசோ தா 2026’-ஐ கடந்த வாரம் தாக்கல் செய் தது. 80 மத்திய சட் டங்களில் உள்ள குற்றப்பிரிவுகளை நீக்கி, அவற்றுக்குப் பதிலாக அபரா தங்களை விதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதா புதனன்று மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. குற்ற வியல் பொறுப்பை வெறும் அபராத மாக மாற்றுவது பெருநிறுவனங்கள் எளிதாகத் தப்பிச் செல்ல வழிவகுக்கும் என்றும், இது நீதிமன்றங்களின் பணியைப் பறித்து அதிகாரவர்க்கத்திடம் ஒப்படைக்கும் செயல் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சித்தனர். ஆனா லும் மசோதாவை ஒன்றிய பாஜக அரசு ஒருதலைப்பட்சமாக குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது.