‘பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான வீரன் ஆதில் ஷா வை யாரும் மறக்க முடியாது’
சு.வெங்கடேசன் எம்.பி.,
தீவிரவாதிகள் மதத்தை விசாரித்து சுற்றுலா பயணிகளை தேடித் தேடி சுட்டுக்கொலை செய்த போது தீவிர வாதிகளை தைரியமாக எதிர்கொண்ட முப்பது வயது இளைஞன் ஆதில் ஷா, சுற்றுலா பயணிகளை நோக்கி சுடப்பட்ட துப்பாக்கியை கைப்பற்ற முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஜூன் 10 காலை ஶ்ரீநகரில் ஆதில் ஷா வின் தந்தை சையத் ஹைதர் ஷா மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தோம். தன் மகனை இழந்த துயரத்தை தாண்டி தன் மகன் வெளிப்படுத்திய உறுதியின் நம்பிக்கை மிளிரும் மனிதராக அவர் இருந்தார். “தீவிரவாதத்தை உறுதி யோடு எதிர் கொண்ட ஒரு ஆதில் ஷா மட்டுமல்ல, பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீர் எங்கும் உண்டு” என்று அவர் சொன்ன வார்த்தைதான் இந்த தேசம் எங்கும் கொண்டு செல்லப்பட வேண்டிய வார்த்தை. என் உடலில் ஓடுவது குருதியல்ல… என மேடையில் நீட்டி முழக்கும் பேச் சல்ல.. தன் முப்பது வயது மகன் சிந்திய குருதியின் உலராத ஈரத்தோடு அவரது தந்தை சையத் ஹைதர் ஷா சொல்லும் சொல் தான் இந்த தேசத்தின் சொல். சையத் ஹைதர் ஷாவின் குரல் தான் தீவிரவாதத்திற்கு எதிரான உறுதிமிக்க குரல். தீவிரவாத தாக்குதலை தனது குறு கிய அரசியல் நோக்கத்திற்காக பயன் படுத்தும் மதவாத கூட்டத்திற்கு எதிரான வலிமையான குரல். இந்த நிலமெங்கும் நீடித்து எதிரொ லிக்கும் குரல்.
முகமது யூசுப் தாரிகாமி “அரசியலமைப்பு தாக்குதலை எதிர்க்க வேண்டும்”
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பி னரும், குல்காம் சட்டமன்ற உறுப்பினரு மான முகமது யூசுப் தாரிகாமி கூறுகை யில், “ஆகஸ்ட் 5, 2019க்குப் பிறகு ஏற்பட்ட சோதனையான காலங்களில், 370ஆவது பிரிவை ரத்து செய்து, மாநி லத்தை இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக ஒருதலைப்பட்சமாக தரம் குறைத்ததன் அரசியலமைப்பு தாக்குதலை சிபிஎம் தேசிய அளவில் கடுமையாக எதிர்த்தது” என்று தெரி வித்தார். “இது ஜம்மு-காஷ்மீருக்கும், இந்திய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவின் பிணைப்பின் மீதான நேரடித் தாக்குதல். முழு மாநில அந்தஸ்தை மீட் டெடுப்பதற்கும் வேலையின்மை, இளை ஞர் கைதுகள் மற்றும் பிராந்திய பொரு ளாதார கவலைகள் போன்ற பிரச்சனைக ளைத் தீர்ப்பதற்கும் அரசாங்கம் தனது உறுதிப்பாட்டை மதிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
அம்ரா ராம் எம்.பி., “பிரிவு 370 பறிப்பு நியாயமற்றது”
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் அம்ரா ராம் எம்.பி., பேசுகையில், “ஆகஸ்ட் 5, 2019 அன்று யாருடனும் கலந்தாலோசிக்கா மல் சத்தமன்றி ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 பறிக்கப்பட்டது. இழந்த உரிமை களை மீட்டெடுப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது” என்று தெரிவித்தார். பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் தாக்குதலால் பூஞ்ச், ரஜோரி, உரி, கெரான், டாங்டார் உள்ளிட்ட எல்லைப் பகுதிகள் பலத்த சேதமடைந்த தாகவும், “அரசாங்கம் ஒரு வீட்டிற்கு ரூ.1.30 லட்சம் என்ற சிறிய இழப்பீடு தந்தது வெறும் கண்துடைப்பு” என்றும் கண்டனம் தெரிவித்தார்.
பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா: “காஷ்மீர்
- ஒற்றுமையின் சின்னம்” சிபிஎம் மாநிலங்களவை உறுப்பி னர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா மாநாட்டில் பேசுகையில், “காஷ்மீர் என்பது ஒற்றுமை மற்றும் சகோத ரத்துவத்தின் சின்னம். 1947 பிரி வினையின் போது முழு துணைக் கண்டமும் இரத்தக்களரியில் மூழ்கியி ருந்தபோது, காஷ்மீர் அதன் ஒற்றுமை யின் சாட்சியத்தைத் தாங்கி நின்றது” என்று குறிப்பிட்டார். “தற்போது ஜம்மு-காஷ்மீர் மக்க ளின் பரந்த நலனுக்காக, ஒற்றுமையை பலமாக வலுப்படுத்த வேண்டும். ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அரசியலமைப்பு உரிமைகளை மீட்டெடுப்பதை சிபிஎம் நாடாளுமன்றத்தில் வலுவாகப் பின் பற்றும்” என்றும் அவர் தெரிவித்தார்.