மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 19 ஆண்டுகளாக சிறையிலிருந்தவர்களை விடுதலை செய்த மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை புறநகர் ரயில்களில் 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 189 பேர் உயிரிழந்தனர், 820 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டு, 2015ஆம் ஆண்டு 5 பேருக்குத் தூக்கு, 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் தங்கள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு திங்களன்று மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனில் கிளோர், ஷியாம் சந்தக் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்குப் பின்பு உயர்நீதிமன்ற நீதிபதிகள், 12 பேர் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபிக்கவில்லை. நியாயமான சந்தேகங்களுக்கு விளக்கமளித்து வழக்கை நிறுவுவதில் அரசு தரப்பு முற்றிலும் தோல்வியடைந்து விட்டது” எனக் கூறி, வழக்கில் தண்டனை பெற்ற 12 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது